Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

May 23, 2026,12:33 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


நைந்து போன பிய்ந்த செருப்பு

கணக்கற்ற குத்துகளுடன்

நூலின் கனம் தாங்காமல்

ஊசலாடும் உயிரென

வீசப்பட்டும் தன் இணையைத்

தேடும் அவலம்.


தெரு திரும்பியதும் தான்

கேட்டது, அந்த இன்னொன்று

என் இணை எங்கே

கேளாத ஒலி

ஒலிக்காத இசை

கேட்டிலையோ; உனக்கு




தேடிப் போ! என்  இணையை

இணையின்றி நான் 

நாதம் ஒலிக்க இசையேன்

உனக்குப் புரிகிறதா; 

தெரிகிறதா என் அவலம்!


என் சோடு அன்றி

என்னால் செலுத்த இயலுமா?

இதை வெளியிடத்தான் முடியுமா

வாயில்லா சீவன்தான். நான்

மனமும் இல்லையா, எனக்கு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!

news

சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!

news

வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி

news

Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!

news

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்