சென்னை : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்ட பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை என்றும், 2வது நாள் தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் என்றும், 3வது நாள் மாட்டுப் பொங்கல் என்றும், 4வது நாளை காணும் பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். தை மாதத்தின் முதல் நாளை நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.
சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை வடக்கு நோக்கு துவங்கும் நாளே தைப் பொங்கல் தினமாகும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த நாளில் சூரிய பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுவார். இதனால் இந்த நாள் நாட்டின் சில பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. உழவுக்கும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, புதிய ஆடைகளை உடுத்தி, வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு, வசந்த காலத்தை வரவேற்க தயாராவார்கள். புதிய பானையில், புதிதாக விளைந்த பச்சரியில் பால், பருப்பு, வெல்லம், நெய் சேர்த்து சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள். பால் பொங்கி வரும் போது பொங்கலோ...பொங்கல் என மக்கள் சங்க நாதம் எழுப்பியும், குலவை போட்டும் வழிபடுவார்கள்.
உலகத்திற்கு ஆதாரமாக விளங்கும் உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரிய உடையறிந்து, தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆட்டம்-பாட்டம் என பொங்கல் விழாவை உற்சாகமாக மக்கள் கொண்டாடுவது வழக்கம்.
.துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
{{comments.comment}}