"பொங்கலோ...பொங்கல்"... இனிமையையும் வளமையையும் பொங்கி பெருக வைக்கும் தைப் பொங்கல்!

Jan 15, 2024,08:08 AM IST

சென்னை : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்ட பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை என்றும், 2வது நாள் தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் என்றும், 3வது நாள் மாட்டுப் பொங்கல் என்றும், 4வது நாளை காணும் பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். தை மாதத்தின் முதல் நாளை நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.


சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை வடக்கு நோக்கு துவங்கும் நாளே தைப் பொங்கல் தினமாகும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த நாளில் சூரிய பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுவார். இதனால் இந்த நாள் நாட்டின் சில பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. உழவுக்கும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.




ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, புதிய ஆடைகளை உடுத்தி, வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு, வசந்த காலத்தை வரவேற்க தயாராவார்கள். புதிய பானையில், புதிதாக விளைந்த பச்சரியில்  பால், பருப்பு, வெல்லம், நெய் சேர்த்து சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள். பால் பொங்கி வரும் போது பொங்கலோ...பொங்கல் என மக்கள் சங்க நாதம் எழுப்பியும், குலவை போட்டும் வழிபடுவார்கள். 


உலகத்திற்கு ஆதாரமாக விளங்கும் உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரிய உடையறிந்து, தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆட்டம்-பாட்டம் என பொங்கல் விழாவை உற்சாகமாக மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்