2வது நாளாக.. அமளியுடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டசபை.. இன்றும் அதிமுக வெளிநடப்பு!

Jun 22, 2024,06:19 PM IST

சென்னை: 3வது நாளாக சட்டசபை இன்று கூடிய நிலையில், இன்றும் அதிமுக உறுப்பினர்கள், அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.


கள்ளக்குறிச்சியில் கடந்த 19ம் தேதி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தற்பொழுது தமிழ்நாட்டையே கதிகலங்கச் செய்துள்ளது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனுதாபங்களையும், இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.




இந்நிலையில் இந்த விவதாத்தை கையில் எடுத்துள்ள அதிமுகவினர், சட்டசபையில் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விஷச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி  கடும் அமளியில் ஈடுப்பட்டனர். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு மறுத்ததால், அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.


அதிமுகவினர் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது. கேள்வி நேரம் முடியட்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி தருகிறேன் என்று தெரிவித்தார். அதனை கேட்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில்,கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டினார். கையாலாகாத ஆட்சியினாலும், நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் நடந்த இத்தனை உயிர்கள் பறிபோகியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்