சென்னை: 3வது நாளாக சட்டசபை இன்று கூடிய நிலையில், இன்றும் அதிமுக உறுப்பினர்கள், அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ம் தேதி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தற்பொழுது தமிழ்நாட்டையே கதிகலங்கச் செய்துள்ளது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனுதாபங்களையும், இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவதாத்தை கையில் எடுத்துள்ள அதிமுகவினர், சட்டசபையில் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விஷச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுப்பட்டனர். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு மறுத்ததால், அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அதிமுகவினர் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது. கேள்வி நேரம் முடியட்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி தருகிறேன் என்று தெரிவித்தார். அதனை கேட்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில்,கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டினார். கையாலாகாத ஆட்சியினாலும், நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் நடந்த இத்தனை உயிர்கள் பறிபோகியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}