சென்னை: 3வது நாளாக சட்டசபை இன்று கூடிய நிலையில், இன்றும் அதிமுக உறுப்பினர்கள், அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ம் தேதி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தற்பொழுது தமிழ்நாட்டையே கதிகலங்கச் செய்துள்ளது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனுதாபங்களையும், இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவதாத்தை கையில் எடுத்துள்ள அதிமுகவினர், சட்டசபையில் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விஷச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுப்பட்டனர். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு மறுத்ததால், அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அதிமுகவினர் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது. கேள்வி நேரம் முடியட்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி தருகிறேன் என்று தெரிவித்தார். அதனை கேட்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில்,கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டினார். கையாலாகாத ஆட்சியினாலும், நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் நடந்த இத்தனை உயிர்கள் பறிபோகியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}