2வது நாளாக.. அமளியுடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டசபை.. இன்றும் அதிமுக வெளிநடப்பு!

Jun 22, 2024,06:19 PM IST

சென்னை: 3வது நாளாக சட்டசபை இன்று கூடிய நிலையில், இன்றும் அதிமுக உறுப்பினர்கள், அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.


கள்ளக்குறிச்சியில் கடந்த 19ம் தேதி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தற்பொழுது தமிழ்நாட்டையே கதிகலங்கச் செய்துள்ளது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனுதாபங்களையும், இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.




இந்நிலையில் இந்த விவதாத்தை கையில் எடுத்துள்ள அதிமுகவினர், சட்டசபையில் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விஷச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி  கடும் அமளியில் ஈடுப்பட்டனர். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு மறுத்ததால், அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.


அதிமுகவினர் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது. கேள்வி நேரம் முடியட்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி தருகிறேன் என்று தெரிவித்தார். அதனை கேட்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில்,கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டினார். கையாலாகாத ஆட்சியினாலும், நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் நடந்த இத்தனை உயிர்கள் பறிபோகியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகள்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

news

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்