சென்னை : 2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார். இதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து காலை 9.30 மணியளவில், பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

இது திமுக அரசு தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். இன்றைய பட்ஜெட் தாக்கலை மக்கள் நேரடியாக காண்பதற்காக சென்னையில் 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலும் எல்இடி திரை மூலம் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இதுதான் தற்போதைய திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட். எனவே இன்றைய பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது தேசிய கல்வி கொள்கை பெரிய அளவில் பிரச்சனையாக பேசப்பட்டு வருவதால் கல்வித்துறை தொடர்பான புதிய திட்டங்கள், அதிக நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் புதிய வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்புகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}