மண்ட பத்ரம்..தமிழ்நாட்டில் வெயில் ஆரம்பம்.. இன்றும், நாளையும்..2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

Feb 15, 2025,05:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக வட தமிழக பகுதிகளான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவி வருகிறது. அநேகமான இடங்களில் பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் வெயில்  அதிகரித்து 32 டிகிரி முதல் 33 டிகிரி வரை பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டின் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




அதன்படி தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவி கூடும்.


அதேபோல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.


20 மற்றும் 21ஆம் தேதி களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும். 


சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் வேலையில் பொதுவாக லேசான பனிமூட்டம்  நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்