சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக வட தமிழக பகுதிகளான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவி வருகிறது. அநேகமான இடங்களில் பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் வெயில் அதிகரித்து 32 டிகிரி முதல் 33 டிகிரி வரை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவி கூடும்.
அதேபோல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
20 மற்றும் 21ஆம் தேதி களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் வேலையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
{{comments.comment}}