சென்னை : தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி மற்றும் சமூக வளர்ச்சிக்கு அரிய தொண்டாற்றிய அறிஞர்களுக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது (ஜனவரி 13, 2026) தமிழக அரசு 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
திருவள்ளு தின விருது பெறுபவர்கள் :

2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது: முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
2025ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது: அமைச்சர் துரைமுருகன்
2025ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது: வழக்கறிஞர் அருள்மொழி
2025ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது: விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன்
2025ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது: எஸ்.எம்.இதயத்துல்லா
தமிழ்த்தொண்டு புரிவோருக்கான மகாகவி பாரதியார் விருது: கவிஞர் நெல்லை ஜெயந்தா
பாவேந்தர் பாரதிதாசன் விருது: கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது: வெ.இறையன்பு
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் செல்லப்பாவு
2025ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது: விடுதலை விரும்பி
இந்த விருதுகள் அனைத்தும் வரும் ஜனவரி 16, 2026 அன்று திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி சிறப்பிக்கப்படும். 1986-ஆம் ஆண்டு முதல் திருக்குறள் நெறியைப் பரப்புபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
தோல்விகளே நிறைய கற்றுத் தருகின்றன.. We learn little from victory, much from defeat!
முயற்சி பண்ணுங்க.. அதுதான் முக்கியம்.. Importance of Participation!
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தடங்கல்கள் எனக்குப் புதிதல்ல... சவால்களை முறியடித்து பொங்கல் ரேஸில் குதிக்கும் வா வாத்தியார்!
அட்வைஸ் பண்ணாதீங்க.. கேக்க மாட்டாங்க.. வேஸ்ட்.. விட்ருங்க!
நம்பிக்கை.. ஆன்மாவின் மெளன வெளிச்சம்!
{{comments.comment}}