சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி நாட்களில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து தனியார் பள்ளி வாகனங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பது வழக்கம். சென்னை தாம்பரத்தில் பள்ளி மாணவி ஒருவர், பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து அநியாயமாக உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னர் பள்ளிப் பேருந்துகளின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனை தனியார் பள்ளிகள் செயல்படுத்தி, பள்ளிகள் திறக்கும் போது அதாவது ஜூன் மாதம் பள்ளி வாகனங்களில் தமிழக அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன்படி இன்று தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மட்டுமல்லாமல், இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.
-அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.
-அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
-பள்ளி வாகனம் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
-ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}