சென்னை: தவெகவுடன் கூட்டணி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி எம் எஸ் முஸ்தபா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. அக்கட்சித் தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் தவெக தலைவர் விஜய் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. தவெக சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தது பற்றி தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி எம் எஸ் முஸ்தபா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
நேற்று தவெக தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரும் உங்களது இயக்கம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். தேர்தல் நேரத்தில் அது பற்றி கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறினோம்.
அதேசமயம், சமூக வலைத்தளங்களில் கூட்டணி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நல்லதொரு சந்திப்பினை ஏற்பாடு செய்து கொடுத்த சகோதரர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}