பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 90.33%  பேர் தேர்ச்சி.. மாணவிகளே வழக்கம் போல முதலிடம்!

May 19, 2023,12:58 PM IST

சென்னை: பிளஸ் 1 தேர்வில் 90.33 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் பாஸ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் பிளஸ் ஒன் தேர்வுகள் நடைபெற்றன. 7.76 லட்சம் பேர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 90.33 சதவீதம் பேர் பாஸாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 0.8 சதவீதம் அதிகமாகும்.

வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.36 சதவீத மாணவிகளும், 86.99 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக 96.38 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடம் பெற்றது. 2வது இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றது. அங்கு 96.18 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதமாக உள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு வாங்கியோர் பட்டியல்:

தமிழ் 9
ஆங்கிலம் 13
இயற்பியல் 440
வேதியியல் 107
கணிதம் 17
கம்ப்யூட்டர் சயின்ஸ் 940 
கணக்குப் பதிவியியல் 995

தேர்வு முடிவுகளை அறிய: http://www.tnresults.nic.in/tpfpecrd.htm

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்