பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 90.33%  பேர் தேர்ச்சி.. மாணவிகளே வழக்கம் போல முதலிடம்!

May 19, 2023,12:58 PM IST

சென்னை: பிளஸ் 1 தேர்வில் 90.33 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் பாஸ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் பிளஸ் ஒன் தேர்வுகள் நடைபெற்றன. 7.76 லட்சம் பேர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 90.33 சதவீதம் பேர் பாஸாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 0.8 சதவீதம் அதிகமாகும்.

வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.36 சதவீத மாணவிகளும், 86.99 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக 96.38 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடம் பெற்றது. 2வது இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றது. அங்கு 96.18 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதமாக உள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு வாங்கியோர் பட்டியல்:

தமிழ் 9
ஆங்கிலம் 13
இயற்பியல் 440
வேதியியல் 107
கணிதம் 17
கம்ப்யூட்டர் சயின்ஸ் 940 
கணக்குப் பதிவியியல் 995

தேர்வு முடிவுகளை அறிய: http://www.tnresults.nic.in/tpfpecrd.htm

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்