பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 90.33%  பேர் தேர்ச்சி.. மாணவிகளே வழக்கம் போல முதலிடம்!

May 19, 2023,12:58 PM IST

சென்னை: பிளஸ் 1 தேர்வில் 90.33 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் பாஸ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் பிளஸ் ஒன் தேர்வுகள் நடைபெற்றன. 7.76 லட்சம் பேர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 90.33 சதவீதம் பேர் பாஸாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 0.8 சதவீதம் அதிகமாகும்.

வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.36 சதவீத மாணவிகளும், 86.99 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக 96.38 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடம் பெற்றது. 2வது இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றது. அங்கு 96.18 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதமாக உள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு வாங்கியோர் பட்டியல்:

தமிழ் 9
ஆங்கிலம் 13
இயற்பியல் 440
வேதியியல் 107
கணிதம் 17
கம்ப்யூட்டர் சயின்ஸ் 940 
கணக்குப் பதிவியியல் 995

தேர்வு முடிவுகளை அறிய: http://www.tnresults.nic.in/tpfpecrd.htm

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்