சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் கன மழை
அதேபோல் புதுச்சேரியில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக அரியாங்குப்பம், தவளக்குப்பம், காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், வில்லியனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டையில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் 7 சென்டிமீட்டர் மழை, ஊத்துக்கோட்டை 6 சென்டிமீட்டர், கும்மிடிப்பூண்டி 5 சென்டிமீட்டர், தாமரைப்பாக்கம் 3 சென்டிமீட்டர் மற்றும் சோழவரத்தில் 2 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நீடித்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் விடுமுறை
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}