சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் கன மழை

அதேபோல் புதுச்சேரியில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக அரியாங்குப்பம், தவளக்குப்பம், காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், வில்லியனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டையில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் 7 சென்டிமீட்டர் மழை, ஊத்துக்கோட்டை 6 சென்டிமீட்டர், கும்மிடிப்பூண்டி 5 சென்டிமீட்டர், தாமரைப்பாக்கம் 3 சென்டிமீட்டர் மற்றும் சோழவரத்தில் 2 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நீடித்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் விடுமுறை
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}