சென்னை: தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு தென்மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் இதனை ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக தர்மபுரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17,000 கனடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் சவாரி இயக்க ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மேற்கு தமிழகம், மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அனேக இடங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கனவே அதிகமாகி விட்டது. மேலும் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.
இன்று மழை:
கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மழை:
வட தமிழக பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக வெயில் மற்றும் ஆங்காங்கே திடீரென மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் இன்று கேரளாவிலும் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}