Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 25, 2024,06:44 PM IST

சென்னை: டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நாள் முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக  வங்கக்கடலில் உருவான காற்று சுழற்சிகள் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் இந்த வருடத்தின் பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகரித்து உள்ளது. 


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக  தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி பெய்யும் மழை, நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழையாக தீவிரம் அடையும். இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.


நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 26 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் IMD மூலம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படலாம்.


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் விரைவில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.. பொறுமையாக காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்