சென்னை: டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நாள் முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்று சுழற்சிகள் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் இந்த வருடத்தின் பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி பெய்யும் மழை, நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழையாக தீவிரம் அடையும். இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 26 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் IMD மூலம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் விரைவில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.. பொறுமையாக காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}