சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் இந்த புயல் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்து வலுவிழந்து தற்போது நிலப்பரப்பின் வழியாக கர்நாடகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நகர்ந்து கொண்டுள்ளது.

இதன் எதிரொலியாக தற்போது திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அணைகளும் ஆறுகளும் வேகமாக நிரம்பி அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அதி கனமழை(ரெட் அலர்ட்):
கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை (எல்லோ அலர்ட்):
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4:00 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு:
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை,கடலூர், ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
ஈரோடு திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை கனமழை:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை,திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர்,ஆகிய 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளா மழை:
அதேபோல் கேரளாவில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4, 5, 6,ஆகிய தேதிகளில் எந்த வானிலை அறிக்கையும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!
புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை
Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
Om Sai.. அன்பே சாய்!
Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!
{{comments.comment}}