Weathar Report.. தமிழ்நாடில் இன்று பெரிய மழைக்கு வாய்ப்பிருக்கா.. நிலவரம் என்ன?

Dec 03, 2024,10:28 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகள், ஆறுகள், அடிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் அதிகப்படியான உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது. 


ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது யூடன் போட்டு திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், தென்காசி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர். 




குறிப்பாக மதுரையில் திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் வேலூரில் மூன்றாவது நாளாக பெய்த தொடர் கனமழை காரணமாக முக்கிய சாலைகள்,  பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் ஆக்கிரமித்துள்ளது.  பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று  நீலகிரி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம்,திருப்பூர், மதுரை, தேனி,  கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என  தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

news

பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்

news

என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்

news

மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??

news

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

news

ஓம் சாமியே சரணம் ஐயப்பா

news

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!

news

மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!

அதிகம் பார்க்கும் செய்திகள்