சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகள், ஆறுகள், அடிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் அதிகப்படியான உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது யூடன் போட்டு திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், தென்காசி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
குறிப்பாக மதுரையில் திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் வேலூரில் மூன்றாவது நாளாக பெய்த தொடர் கனமழை காரணமாக முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம்,திருப்பூர், மதுரை, தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!
Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!
காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!
21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!
பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
{{comments.comment}}