சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகள், ஆறுகள், அடிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் அதிகப்படியான உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது யூடன் போட்டு திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், தென்காசி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

குறிப்பாக மதுரையில் திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் வேலூரில் மூன்றாவது நாளாக பெய்த தொடர் கனமழை காரணமாக முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம்,திருப்பூர், மதுரை, தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}