சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகள், ஆறுகள், அடிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் அதிகப்படியான உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது யூடன் போட்டு திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், தென்காசி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

குறிப்பாக மதுரையில் திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் வேலூரில் மூன்றாவது நாளாக பெய்த தொடர் கனமழை காரணமாக முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம்,திருப்பூர், மதுரை, தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
நான் விரும்பும் வகுப்பறை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
{{comments.comment}}