வட மாவட்டங்களில் இரவு நேர மழை.. டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 14, 2024,05:16 PM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தினசரி இரவில் மழை தொடரும். அதேபோல் இன்று முதல் நாளை வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென காற்றழுத்த தாழ்வு பகுதி வலு இழந்தது. இதனால் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்தது. 


இதற்கிடையே வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று கனமழை கொட்டி  தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது.




இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது, நெல்லை மாவட்டம், ஏர்வாடி, வள்ளியூர் பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வழக்கமாக மாலை அலுவலகம்  முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மீண்டும் லேசான மழைகளாக தொடர வாய்ப்புள்ளது. இந்த மழை சுமார்  5-10 நிமிடங்கள் குறுகியதாக இருக்கும்.


சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில்  தினசரி இரவு நேரங்களில் மழை தொடரும்.தென் சென்னையில் மீண்டும் நல்ல மழை பெய்யும்.  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் ஈரப்பதம் பரவி இருப்பது ஒரு நல்ல  செய்தி.


இன்று முதல் நாளை வரை  டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமந்தபுரம்,  தூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் வழக்கம் போல் இரவு முதல் காலை வரை மழை பெய்யும். அதே சமயம் பகலில் ஆங்காங்கே மழை பெய்யும்.  உள் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். ஆனால் எல்லா இடங்களிலும் பெய்யாது.


சென்னையில் உள்ள ஏரிகள் முழுவதும் நிரம்பாததால், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற கவலை மக்களுக்கு வேண்டாம். ஏனெனில் காற்று சுழற்சிகள்,மிமேகக் கூட்டங்கள், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என அனைத்தும் தமிழ்நாட்டுப் பகுதிகள்தான் நீடிக்கின்றது. நமக்கு  இன்னும் பருவமழை காலம் அதிகம் உள்ளது. நாம் இப்போது நவம்பர் நடுப்பகுதியில்தான் இருக்கிறோம். அதனால் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்