தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!

Oct 30, 2024,03:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் நவம்பர் ஐந்தாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஆனால் இதற்கிடையே மழை குறைந்து பகல் நேரங்களில் வெயில் அதிகரித்தும், மாலை நேரங்களில் குளிர்ச்சியும் நிலவுகிறது. 




இருப்பினும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.தொடர்ந்து இன்று திடீரென ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, மாம்பழம் ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.


இந்த நிலையில்  மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதேபோல் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 


இதன் காரணமாக  இன்று முதல் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மழை: 


அதேபோல் சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இன்று கனமழை:


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை:


திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை மறுநாள் கனமழை: 


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, தென்காசி, மதுரை,விருதுநகர், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நவம்பர் 2


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ,மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?

news

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு

news

நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

news

தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி

news

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது

news

வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி

news

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்