ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

Jan 06, 2025,05:08 PM IST

சென்னை: ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படாமல் அது அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டசபையிலிருந்து வெளியேறியதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் உரையுடன் அவைக் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆளுநர் உரையைப் படிக்காமலேயே ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை முதலில் ஒரு டிவீட் செய்திருந்தது. அதில், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் ஆகியோரை மேற்கோள் காட்டி ஒரு விளக்கம் இடம் பெற்றிருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டு, புதிதாக ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில்  ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது:




தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்  பாடப்படுகிறது.  இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. 


ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். 


அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு  உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையை நெருங்கும் டிட்வா புயல்... இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!

news

Ditwah cyclone update டெல்டாவை புரட்டி போடும் டித்வா...சென்னைக்கு எப்போ? வெதர்மேன் தந்த அப்டேட்

news

இலங்கையைப் புரட்டிப் போட்ட டிட்வா புயல்.. பேரிழப்பு.. அவசர நிலை பிரகடனம்

news

சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு செய்து தர வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

டிட்வா புயல் எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

news

இதுக்கு ஒரு எண்டே இல்லையா?.. விஜய்யைத் தேடித் தேடி வரும் இடியாப்ப சிக்கல்கள்!

news

PMK infighting: அடம்பிடிக்கும் அப்பா-மகன்.. கூட்டணியை பலப்படுத்தப் போராடும் பாஜக

news

தவெகவுக்கு வரப் போகும் மாஜி அமைச்சர்கள் யார்.. செங்கோட்டையன் சொல்வது உண்மையா?

news

சென்னையில் இருந்து 350 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்