ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

Jan 06, 2025,05:08 PM IST

சென்னை: ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படாமல் அது அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டசபையிலிருந்து வெளியேறியதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் உரையுடன் அவைக் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆளுநர் உரையைப் படிக்காமலேயே ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை முதலில் ஒரு டிவீட் செய்திருந்தது. அதில், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் ஆகியோரை மேற்கோள் காட்டி ஒரு விளக்கம் இடம் பெற்றிருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டு, புதிதாக ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில்  ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது:




தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்  பாடப்படுகிறது.  இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. 


ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். 


அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு  உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறுந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை:அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

news

வாரத்தின் முதல் நாளில் அதிரடி ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்