சென்னை: தென் மேற்குப் பருவ மழை சீசனில் மிகப் பெரிய மழை வரும் நாட்களில் கொட்டப் போகிறது. எனவே பருவ மழை பெய்யும் பகுதிகளில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்குப் போவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
தென் மேற்குப் பருவ மழை தொடங்கி இதுவரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவிலும், தமிழ்நாட்டின் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதல் பெரிய மழை பெய்யப் போவதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சீசனின் முதல் பெரிய மழை

இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்குப் பருவ மழை கேரளா, கர்நாடகா, நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரியின் வனப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பெய்யவுள்ளது. இதுதான் இந்த சீசனின் முதல் பெரிய மழையாக இருக்கும். சில இடங்களில் கன மழை இருக்கும் வாய்ப்புள்ளது.
ஜூன் 22, 23 மற்றும் 28, 29 ஆகிய நாட்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால், மூணாறு, இடுக்கி, வயநாடு, குடகு, சிக்மகளூர், ஷிமோகா, கூடலூர் - பந்தலூர் பகுதிகள், வால்பாறை, கேரளா, கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இந்த சீசனில் இப்போதுதான் முதல் முறையாக நல்ல மழைப் பொழிவை பார்க்கவுள்ளோம்.
ஈரம் நிறைந்த ஜூன்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1996ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஜூன் மாதத்தில் அதிக அளவிலான மழைப் பொழிவு கிடைத்துள்ளது. வழக்கம் போல இன்றும் கூட மாலை அல்லது இரவில் மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் இருக்காது. இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}