மழையெல்லாம் முடிஞ்சு போச்சு.. போங்க போங்க.. நாளைல இருந்து மழைக்கு பிரேக்.. தமிழ்நாடு வெதர்மேன்!

Dec 31, 2024,08:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்து மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது. 


இருப்பினும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவினாலும் மாலை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது . பகலில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதனால் வெயில் குறைந்து தமிழ்நாடு முழுவதும்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 


இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.




அதன்படி, மாஞ்சோலை மலைப்பகுதியில் ஊத்து மற்றும் நாலுமூக்கு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.  அதாவது திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 140 மில்லி மீட்டர் மழையும், நாலு  மூக்கில் 128 மில்லி மீட்டரும் மழையும், கக்காச்சி பகுதியில் 118 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலை பகுதிகளில் 102 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


மாஞ்சோலை மலைப்பகுதியில் இன்றும் கனமழை பெய்யும்.  நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வட கிழக்குப் பருவ மழைக்காலமானது இன்றோடு நிறைவு பெறவுள்ளது. அருமையான மழையைக் கொடுத்த இந்த சீசனுக்கு நன்றி சொல்லி.. அடுத்து வரப் போகும் வாட்டி வதைக்கும் வெயில் காலத்துக்காக வியர்க்க விறுவிறுக்க காத்திருப்போம்.!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்