சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்து மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது.
இருப்பினும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவினாலும் மாலை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது . பகலில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதனால் வெயில் குறைந்து தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மாஞ்சோலை மலைப்பகுதியில் ஊத்து மற்றும் நாலுமூக்கு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 140 மில்லி மீட்டர் மழையும், நாலு மூக்கில் 128 மில்லி மீட்டரும் மழையும், கக்காச்சி பகுதியில் 118 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலை பகுதிகளில் 102 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மாஞ்சோலை மலைப்பகுதியில் இன்றும் கனமழை பெய்யும். நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வட கிழக்குப் பருவ மழைக்காலமானது இன்றோடு நிறைவு பெறவுள்ளது. அருமையான மழையைக் கொடுத்த இந்த சீசனுக்கு நன்றி சொல்லி.. அடுத்து வரப் போகும் வாட்டி வதைக்கும் வெயில் காலத்துக்காக வியர்க்க விறுவிறுக்க காத்திருப்போம்.!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}