டெல்லி: நவராத்திரி முதல் நாளில் 30,000 கார்களை விற்பனை செய்து மாருதி சுசூகி சாதனை செய்துள்ளது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. மத்திய அரசு வரி குறைப்பு செய்ததினால், கார்கள், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரி விதிப்பு குறைவால் கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலைகளை கணிசமாக குறைந்துள்ளது. அது குறித்த விலை பட்டியலையும் வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று நவராத்திரி முதல் நாள் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுனம் 10 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. புதிய கார்களின் விற்பனை மட்டுமின்றி, பழைய கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
அதேபோல், 30 ஆயிரம் கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனமும் சாதனை படைத்துள்ளது. இந்த விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனமும் சுமார் 11 ஆயிரம் கார்களை நேற்று ஒரே நாளில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
Moconaa Falls.. எங்கடா இங்க இருந்த நீர்வீழ்ச்சியைக் காணோம்.. ஆற்றில் மறையும் அதிசயம்!!
கண்ணா.. கண்ணா.. உன் இதழும் இனியது.. முகமும் இனியது..!
எங்கே என் சொந்தம்?
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
{{comments.comment}}