நவராத்திரி முதல் நாளில் 30,000 கார்கள் விற்பனை... மாருதி சுசூகியின் அசத்தல் சாதனை!

Sep 23, 2025,04:37 PM IST

டெல்லி: நவராத்திரி முதல் நாளில் 30,000 கார்களை விற்பனை செய்து மாருதி சுசூகி சாதனை செய்துள்ளது.


ஜிஎஸ்டி வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. மத்திய அரசு வரி குறைப்பு செய்ததினால், கார்கள், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இந்த வரி விதிப்பு குறைவால் கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலைகளை கணிசமாக குறைந்துள்ளது. அது குறித்த விலை பட்டியலையும் வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று நவராத்திரி முதல் நாள் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுனம் 10 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. புதிய கார்களின் விற்பனை மட்டுமின்றி, பழைய கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.


அதேபோல், 30 ஆயிரம் கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனமும் சாதனை படைத்துள்ளது. இந்த விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஹூண்டாய் நிறுவனமும் சுமார் 11 ஆயிரம் கார்களை நேற்று ஒரே நாளில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

news

நவராத்திரி முதல் நாளில் 30,000 கார்கள் விற்பனை... மாருதி சுசூகியின் அசத்தல் சாதனை!

news

4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: எம்பிக்களுக்கு முதல்வர் முகஸ்டாலின் உத்தரவு

news

மக்கள் பணத்தில் பொது இடங்களில் சிலை வைக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

news

முத்துமலை முருகன் கோவில்.. தமிழ்நாட்டில் முருகனுக்கான முத்திரைக் கோவில்களில் ஒன்று!

news

Poonam Pandey: ராவணனின் மனைவியாக பூனம் பாண்டே நடிக்க... பாஜக கடும் எதிர்ப்பு

news

ஆபரேஷன் நும்கூர்: துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

news

அரசியலில் இல்லாத ரஜினிகாந்த்தை.. மாதாமாதம் அண்ணாமலை சந்திப்பது ஏன்.. என்ன திட்டம்?

news

அக்டோபர் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்