விசாகப்பட்டனம்: ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் அறிவித்துள்ளன. பாஜக இக்கூட்டணியில் உண்டா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தகவல் இருந்தால் அப்டேட் செய்கிறோம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் வரவுள்ளது. இதையடுத்து அங்கு கூட்டணிகளை பலப்படுத்த கட்சிகள் மும்முரமாக உள்ளன. அங்கு தற்போது ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கட்சி ஆட்சியை வீழ்த்த தெலுங்கு தேசம் கட்சி படு தீவிரமாக உள்ளது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் அடைத்ததை அந்த கட்சி மறக்கவில்லை. எனவே ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைக் காலி செய்ய தீவிரமாக உள்ளார் நாயுடு.

இதனால் வருகிற சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைத்துள்ளார். இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது கூட்டாக அறிவித்துள்ளனர் நாயுடுவும், பவன் கல்யாணும்.
இந்த 118 தொகுதிகளில் 94 இடங்களில் தெலுங்கு தேசம் போட்டியிடுகிறது. 24 இடங்களில் பவன் கல்யாண் கட்சி போட்டியிடும். மொத்தம் 175 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. மற்ற இடங்கள் யாருக்கு ஒதுக்கப்படும், கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தகவல் வந்தால் அப்டேட் செய்யப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை பவன் கல்யாண் கட்சிக்கு 3 இடங்களை தெலுங்கு தேசம் ஒதுக்கியுள்ளது. ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் சேர்த்தே நடத்தப்படவுள்ளது.
சந்திரபாபு நாயுடு சில வாரங்களுக்கு முன்புதான் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதேபோல ஜெகன் மோகன் ரெட்டியும் கூட பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தப் பின்னணியில் பாஜகவுக்கான டீலிங் குறித்து தெளிவில்லாத நிலையில் தொகுதிப் பங்கீட்டை நாயுடு அறிவித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வேட்பாளர்களை வெளியிட்ட பின்னர் நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் - ஜன சேனா கட்சி தேர்தல் போருக்குத் தயார். இது மாநிலத்தின் எதிர்காலத்துக்கான கூட்டணி, சிறந்த ஆந்திர பிரதேசத்துக்கான கூட்டணி என்றார்.
வேட்பாளர் பட்டியல் பார்க்க சூப்பராகத்தான் இருக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி, 2 பிஎச்டி பட்டதாரிகள், 3 டாக்டர்கள், 28 முதுகலை படிப்பு முடித்தவர்கள், 50 பட்டதாரிகள் என படித்தவர்களாக நிரம்பியுள்ளனர். அனைத்து சமூகத்தினருக்கும் பரவலாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}