ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில், கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறின்போது இளைஞர் ஒருவர், கண்டக்டர் கன்னத்தைப் பிடித்து நறுக்கென கடித்து வைத்து விட்டார். இதனால் கன்னம் வீங்கி, வலி தாங்க முடியாமல் கண்டக்டர் கதறினார்.
விடிஞ்சு எழுந்தா எத்தனையோ பிரச்சனைகள் தினமும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொன்றும் புது விதமாத்தான் இருக்கு.. இப்படியும் நடக்குது பாருங்களேன் என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு பல பஞ்சாயத்துக்கள் இருந்தாலும்.. இப்படியுமா என்று நம்மை திகிலடிக்க வைக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று கூட தெரியாமல் ஏடாகூடமாக நடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அப்படி தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இது ஒரு அடிதடி மேட்டர்.. கூடவே "கடி" மேட்டரும் கூட.. நடந்தது தெலங்கானா மாநிலத்தின் "அடி"லாபாத்தில்!
தெலங்கானா மாநிலம், அடிலாபாத்தைச் சேர்ந்தவர் அசிம் கான். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து அடிலாபாத் செல்லும் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்துள்ளார். டிக்கெட் எடுத்த பிறகு பார்த்தால் உட்கார இடம் இல்லை. இதனால் நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால், பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது. நடத்துனருக்கும் ஆசிம் கானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்தினால் நடந்துனர் ஆசிமிடம் பணத்தை திருப்பி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறங்க கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிம் கான் பேருந்தில் இருந்த நடத்துனரின் கன்னத்தைப் பிடித்து பலமாக கடித்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறினார் கண்டக்டர். அவரது கண்ணுக்குக் கீழே நன்றாக பல் படும் அளவுக்கு கடித்து வைத்திருந்தார் அசிம் கான். இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. அருகில் இருந்த பயணி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பிரஸ்மீட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை.. கிளம்பிய சர்ச்சை!
என்னாது நோபல் அமைதிப் பரிசு லீக் ஆய்ருச்சா.. சூதாட்டக் கும்பல் அட்டகாசம்.. அதிர்ச்சியில் நார்வே
அனல் பறக்கும் மாதம்பட்டி விவகாரம்.. பாலைவன பூமியில் ஓய்வெடுக்கும் மனைவி ஸ்ருதி
பேசாம ஹனிமூனையும் கூட நீங்களே முடிவு செஞ்சு சொல்லிடுங்களேன்.. திரிஷா நச் பதிலடி!
அக்.,17ல் கரூர் செல்லும் விஜய்?... கல்யாண மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க திட்டம்!
ஐயா அப்பத்தாவே ஆணிவேர் !
பெரியார் வழியைக் காட்டிய தந்தை.. அடுத்தடுத்து படித்து.. அசர வைக்கும் பேராசிரியை மஞ்சரி!
அம்மாவுக்குள் இருந்த ஏக்கம்.. அவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக மேடையில் கலக்கும் தன்யா!
பெண்கள் படிக்கணும்.. கத்துக்கிட்டே இருக்கணும்.. உதாரண நாயகியாக திகழும் டாக்டர் உஷா தண்டாயுதபாணி!
{{comments.comment}}