ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
தெலங்கானா தனி மாநிலமாகிய பின்னர் நடக்கும் 3வது சட்டசபை தேர்தலாகும் இது. இதுவரை நடந்த 2 தேர்தல்களிலும் டிஆர்எஸ் எனப்படும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த முறை ஹாட்ரிக் வெற்றிக்கு அக்கட்சி குறி வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று அங்கு தேர்தல் நடந்தது. தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 119 தொகுதிகளில் 2290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பல முனை போட்டி நிலவி வருவதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வருகின்றனர். இதனால் இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் வெகுவாக திரண்டு வந்து வாக்களித்தனர். நடிகர் அல்லு அர்ஜூன் ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்துள்ளார். இயக்குனர் ராஜமவுலி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர் வெங்கடேஷ், நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். நடிகர் ஜெகபதி பாபு பிலிம் நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் தேவரகொண்டா ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் வாக்களித்தார்.

அங்கு கடும் குளிர் நிலவி வருவதையும் பொருட்படுத்தாது பிரபலங்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நானே தான் எனக்குத் தோழி!
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சீற்றத்தில் சிஸ்டர் நிர்மலா.. தினந்தோறும் தீ மிதிக்கும் சீதா.. (சீதா - 2)
நீள் ஆயுள்.. நிறை செல்வம்.. ஓங்கி வாழும் மெஞ்ஞானம்.. 10 சங்கல்பங்களைக் கைக் கொள்ளுங்கள்!
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
{{comments.comment}}