சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடு.. தெலுங்கானா ஹைகோர்ட் உத்தரவு!

Jan 29, 2025,10:40 AM IST

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த திரைப்படம் ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் 4ம் தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியைப் பார்க்க திரளான ரசிகர் பட்டாளம் ஒன்று கூடினர். அப்போது பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்தார். 


அப்போது அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூனைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் தேஜா காயமடைந்தார். காயமடைந்த மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில், தற்போது ராம்சரண் நடிப்பில் வெளிவந்த கேம் ரேஞ்சர் படத்திற்கு பிரீமியம் காட்சிகளும், டிக்கெட் உயர்வும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 4 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. விசாரணைக்குப் பின்னர், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும், இரவு 11 மணிக்கு பின்னதாகவும் திரைப்பட காட்சிகளுக்கு அனுமதிக்க கூடாது என்று மாநில அரசு மற்றும் தியேட்டர் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


புஷ்பா 2 ப்ரீமியம் ஷோவின் போது பெண்ணின் மரணத்திற்கு வழி வகுத்த போதிலும், அவரது இளம் மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு டிக்கெட் உயர்வு மற்றும் கூடுதல் நிகழ்ச்சிகளை அனுமதித்ததற்கு மாநில அரசை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்