சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் கூட பல்வேறு பகுதிகளில் வெயிலும் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசிய வருகிறது. அத்துடன் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதன்படி நேற்று திருத்தணி, ஈரோடு, மதுரையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

திருச்சி மற்றும் வேலூரில் தலா 100 டிகிரி ஃபாரின்ஹீட்டும், கரூர் பரமத்தி, சென்னை, திருப்பத்தூரில் தலா 98 டிகிரி ஃபாரின்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்றனர். இதனால் தாகத்தை தணிக்க குளுமையான தர்ப்பூசணி, பழ ஜுஸ், கரும்புச்சாறு, போன்ற இயற்கை பானங்களை நாடி செல்கின்றனர். அதே சமயத்தில் இந்த வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் மக்கள் குளுமையான சுற்றுலா தலங்களை படையெடுக்க துவங்கி விட்டனர். தற்போது தொடர் விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணார், போன்ற சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி
தமிழ்நாடு வெயில்:
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் அதிக வெப்பநிலை, மற்றும் அதிக ஈரப்பதம் பதிவாக வாய்ப்புள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்க கூடும். ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும்.இதன் காரணமாக மக்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மழை:
கடலோர ஆந்திரா அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை ரத்து.. இன்றே தீபம் ஏற்ற வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் தனி நீதிபதி உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}