சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் கூட பல்வேறு பகுதிகளில் வெயிலும் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசிய வருகிறது. அத்துடன் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதன்படி நேற்று திருத்தணி, ஈரோடு, மதுரையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

திருச்சி மற்றும் வேலூரில் தலா 100 டிகிரி ஃபாரின்ஹீட்டும், கரூர் பரமத்தி, சென்னை, திருப்பத்தூரில் தலா 98 டிகிரி ஃபாரின்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்றனர். இதனால் தாகத்தை தணிக்க குளுமையான தர்ப்பூசணி, பழ ஜுஸ், கரும்புச்சாறு, போன்ற இயற்கை பானங்களை நாடி செல்கின்றனர். அதே சமயத்தில் இந்த வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் மக்கள் குளுமையான சுற்றுலா தலங்களை படையெடுக்க துவங்கி விட்டனர். தற்போது தொடர் விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணார், போன்ற சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி
தமிழ்நாடு வெயில்:
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் அதிக வெப்பநிலை, மற்றும் அதிக ஈரப்பதம் பதிவாக வாய்ப்புள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்க கூடும். ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும்.இதன் காரணமாக மக்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மழை:
கடலோர ஆந்திரா அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
யாசகத்தோழி!
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
பூமி தினம்
World Earthday.. பூமியைக் கொண்டாடுவோம்.. பாதுகாப்பாக காத்திருப்போம்!
{{comments.comment}}