சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த கோடை காலத்தில் இந்தியாவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போதே வெப்ப நிலை அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

14ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்பவே சதம் போடும் நகரங்கள்
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}