- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
தாயின் கருணை பொழியும் தாய் மண்ணே ..!!
தன்னிகரற்ற உனக்கு அன்பு வணக்கங்கள்...!!
பரந்த கடல்களை முப்புறமும் கொண்டவளே..!!
பசுமை போர்த்திய மலைகளை கொண்டவளே..!!
இயற்கை அன்னையின் எழில் கொண்டவளே ..!!
இனிய பசும் வயல்வெளியை பரிசளித்தவளே.!!
துள்ளி விளையாடும் நதிகளை கொண்டவளே..!!
தூய தென்றல் காற்றின் அமைதி கொண்டவளே..,!!
வடக்கே இமயமும், தெற்கே குமரியும் கொண்டவளே..!!
பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் கொண்டவளே..!!
வேற்றுமையில் ஒற்றுமை காண்பவளே..!!
உன் மடியில் பிறந்தோம், தவழ்ந்தோம் ,உயர்ந்தோம்...!!
பாரதத் தாயே உன் வளத்தால் வளர்ந்தோம்..!!
பாசக்கரம் நீட்டி , நீ சீராட்டி ,பாராட்டி வளர்த்தாய் ..!!
திருவள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும்,
அன்னை தெரசாவும் ,பிறந்த புண்ணிய பூமி நீ..!!
புத்தரும், காந்தியும் பிறந்து வாழ்ந்த பூமி நீ!!
புண்ணிய நதிகளின் பிறப்பிடம் நீ..!!
பல்வேறு மக்கள், பல்வேறு இனங்கள் இருந்தும்,
பாரதமாதா நீ மட்டுமே எங்கள் தாய்..!!
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்.
இனிய பாரதத்தினை உலகஅரங்கில் உயர்த்துவோம்.
அன்பும் ,பண்பும், ஒற்றுமையும் நிறைந்து...
அமைதியாய் வாழ்ந்திடுவோம் உன் மடியில்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}