- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
தாயின் கருணை பொழியும் தாய் மண்ணே ..!!
தன்னிகரற்ற உனக்கு அன்பு வணக்கங்கள்...!!
பரந்த கடல்களை முப்புறமும் கொண்டவளே..!!
பசுமை போர்த்திய மலைகளை கொண்டவளே..!!
இயற்கை அன்னையின் எழில் கொண்டவளே ..!!
இனிய பசும் வயல்வெளியை பரிசளித்தவளே.!!
துள்ளி விளையாடும் நதிகளை கொண்டவளே..!!
தூய தென்றல் காற்றின் அமைதி கொண்டவளே..,!!
வடக்கே இமயமும், தெற்கே குமரியும் கொண்டவளே..!!
பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் கொண்டவளே..!!
வேற்றுமையில் ஒற்றுமை காண்பவளே..!!
உன் மடியில் பிறந்தோம், தவழ்ந்தோம் ,உயர்ந்தோம்...!!
பாரதத் தாயே உன் வளத்தால் வளர்ந்தோம்..!!
பாசக்கரம் நீட்டி , நீ சீராட்டி ,பாராட்டி வளர்த்தாய் ..!!
திருவள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும்,
அன்னை தெரசாவும் ,பிறந்த புண்ணிய பூமி நீ..!!
புத்தரும், காந்தியும் பிறந்து வாழ்ந்த பூமி நீ!!
புண்ணிய நதிகளின் பிறப்பிடம் நீ..!!
பல்வேறு மக்கள், பல்வேறு இனங்கள் இருந்தும்,
பாரதமாதா நீ மட்டுமே எங்கள் தாய்..!!
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்.
இனிய பாரதத்தினை உலகஅரங்கில் உயர்த்துவோம்.
அன்பும் ,பண்பும், ஒற்றுமையும் நிறைந்து...
அமைதியாய் வாழ்ந்திடுவோம் உன் மடியில்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}