ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

Feb 05, 2025,06:08 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: தைப்பூசத்திற்கு 48 நாட்கள், 21 நாட்கள்,11 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் தை கிருத்திகை பிப்ரவரி 6 அன்று இருக்கலாம். தை மாதம் வரும் சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் மிகவும் சிறப்பானதாகும்.


அவற்றில் கார்த்திகை நட்சத்திரம் விரதம் முருகன் அருளை பெற விரும்பும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களும் அருள்வார்.


கார்த்திகை நட்சத்திரம் நேரம் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை இரவு 11 :19 மணி முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வியாழன் இரவு 9:53 வரை. கார்த்திகை நட்சத்திரம் வியாழன் அன்று வருவது முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறந்த நாள் ஆகும்.




பல வீடுகளில் கடுமையான விரத முறை கடைப்பிடிப்பார்கள். கந்தனை மனதில் நினைத்து நம் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகளை அவனிடம் முறையிட்டு வழிபட்டால் முருகன் அருள் அனைவருக்கும் கிட்டும். வீட்டில் ஒருவர் விரதம் முறை கடைப்பிடிப்பதால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனைத்து வளங்களும் நலங்களும் கிட்டும் இந்த நாளில் விரதம் இருப்பவர் காலையில் குளித்துவிட்டு முருகன் கோவிலுக்கு சென்று அவர் சன்னதியில் நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.


அவ்வாறு கோவிலுக்கு செல்ல இயலாதவர் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தை மலர்களால் அலங்கரித்து ,விளக்கேற்றி நைவேத்தியமாக பால், பழங்கள் ,பொங்கல் வைத்து வழிபடலாம். படிப்பில் வெற்றி பெற, நல்ல வேலை கிடைக்க, திருமண தடை நிவர்த்தி பெற, குழந்தை வரம் வேண்டி ,சொந்த வீடு அமைய கடன் பிரச்சினைகள் தீர, நோய்நொடி இன்றி வாழ, ஆரோக்கியம் சிறக்க, குடும்பம் நலம் பெற, கந்தனை மனதார நினைத்து வழிபடுபவர் என்றும் கைவிடப்படார்


முருகன் வேல் வைத்து வழிபாடு செய்பவர் அவ்வேலுக்கு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து வழிபடலாம். வீட்டில் இருந்து விரதம் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், குமாரஸ்தவம் ,வேல்மாறல், சஸ்திர பந்தம் போன்ற கந்தனை பற்றிய பாடல்கள் படிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் மாலையில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது மிகவும் சிறப்பு.


கந்தனை நினைத்து மௌன விரதம் இருப்பதும் மிகச்சிறப்பு .மனதை ஒருநிலைப்படுத்தி 108 முறை ஓம் சரவணபவ என்று மனதில் சொல்லி வழிபடலாம். அல்லது ஒரு நோட்டு புத்தகத்தில் 108 முறை எழுதி வழிபடலாம். கந்தன் அனுக்கிரகம் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்கும்.


ஓம் முருகா சரணம்.. வேலும் மயிலும்  சேவலும் துணை!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக சட்டசபை தலைவராக விஜய் தேர்வு.. நாளை மறு நாள் முதல்வராகப் பதவியேற்பு?

news

TVK needs 117: தவெக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 அல்ல.. 117!

news

பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?

news

TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?

news

Mango Thokku Tips: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில் செமையான.. கிளிமூக்கு மாங்காய் தொக்கு!

news

அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்

news

திமுகவை விட 17.43 லட்சம் வாக்குகளே தவெக கூடுதலாகப் பெற்றுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

4 தொகுதிகளில் NDA.,வின் வெற்றியை பதம் பார்த்த சசிகலாவின் 'அஇபுதமுக'

news

Vijay Vs Udayanidhi Stalin: தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்?

அதிகம் பார்க்கும் செய்திகள்