- தி.மீரா
தமிழ் ஆன்மீக மரபில் தைப்பூசம் ஒரு மிகச் சிறப்பான புனித நாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் இந்நாள், ஞானம், அருள், ஒளி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தத் தைப்பூசத் திருநாள் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் வாழ்க்கையிலும், அவர் வழங்கிய ஆன்மீக சிந்தனைகளிலும் மிக முக்கிய இடம் பெற்றுள்ளது.
வள்ளலார், மனித குலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கண்ட கருணை வடிவம். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய அவர், உயிர் அனைத்திலும் அன்பும் இரக்கமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தைப்பூச நாளை அவர் அருள் ஒளி மலரும் நாளாக எடுத்துரைத்தார்.

வடலூரில் அமைந்த சத்திய ஞான சபை, தைப்பூசத்தின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் மையமாக விளங்குகிறது. இங்கு ஏற்றப்படும் ஜோதி, எந்த உருவமும் இல்லாத, அனைத்தையும் இணைக்கும் அருள் ஒளியின் சின்னமாக திகழ்கிறது. இந்த ஒளி வழிபாடு, மனிதனை மதம், சாதி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் உயர்த்துகிறது.
தைப்பூசம் வள்ளலார் வழியில், அன்னதானம், உயிர் இரக்கம், சுத்தமான வாழ்க்கை, சன்மார்க்கம் ஆகியவற்றை நினைவூட்டும் நாளாகும்.
அன்று வழங்கப்படும் அன்னம், பசியை மட்டுமல்ல, மனித மனத்தையும் நிரப்புகிறது. எனவே, தைப்பூசமும் வள்ளலாரும் நமக்கு சொல்லும் செய்தி ஒன்றே — அருளே ஆன்மிகம்; கருணையே கடவுள்.
இந்த உயர்ந்த சிந்தனைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதே தைப்பூசத்தின் உண்மையான அர்த்தமாகும்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}