- தி.மீரா
தமிழ் ஆன்மீக மரபில் தைப்பூசம் ஒரு மிகச் சிறப்பான புனித நாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் இந்நாள், ஞானம், அருள், ஒளி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தத் தைப்பூசத் திருநாள் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் வாழ்க்கையிலும், அவர் வழங்கிய ஆன்மீக சிந்தனைகளிலும் மிக முக்கிய இடம் பெற்றுள்ளது.
வள்ளலார், மனித குலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கண்ட கருணை வடிவம். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய அவர், உயிர் அனைத்திலும் அன்பும் இரக்கமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தைப்பூச நாளை அவர் அருள் ஒளி மலரும் நாளாக எடுத்துரைத்தார்.

வடலூரில் அமைந்த சத்திய ஞான சபை, தைப்பூசத்தின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் மையமாக விளங்குகிறது. இங்கு ஏற்றப்படும் ஜோதி, எந்த உருவமும் இல்லாத, அனைத்தையும் இணைக்கும் அருள் ஒளியின் சின்னமாக திகழ்கிறது. இந்த ஒளி வழிபாடு, மனிதனை மதம், சாதி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் உயர்த்துகிறது.
தைப்பூசம் வள்ளலார் வழியில், அன்னதானம், உயிர் இரக்கம், சுத்தமான வாழ்க்கை, சன்மார்க்கம் ஆகியவற்றை நினைவூட்டும் நாளாகும்.
அன்று வழங்கப்படும் அன்னம், பசியை மட்டுமல்ல, மனித மனத்தையும் நிரப்புகிறது. எனவே, தைப்பூசமும் வள்ளலாரும் நமக்கு சொல்லும் செய்தி ஒன்றே — அருளே ஆன்மிகம்; கருணையே கடவுள்.
இந்த உயர்ந்த சிந்தனைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதே தைப்பூசத்தின் உண்மையான அர்த்தமாகும்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}