தரணியெங்கும் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம்..வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை!

Feb 10, 2025,06:06 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


தைப்பூசம் என்பது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. தைப்பூசம் தமிழ் இந்து பண்டிகையாகும். உலகம்  முழுவதும் உள்ள தமிழர்கள் குறிப்பாக முருக பக்தர்கள் இதனை சிறப்பாக விரதம் இருந்து கொண்டாடுகின்றனர். 


வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை! கந்தன் உண்டு கவலை இல்லை! வழிபாடு செய்ய வறுமை நீங்கி செல்வம் பெருகும் வசதி வாய்ப்புகளும் கிடைக்கும்.  தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். காவடி எடுத்தல் மற்றும் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் முருகன் கோவில்களில் நடைபெறும்.


அழகு என்ற சொல்லுக்கு உகந்தவன் முருகன். இவன் தேவ சேனாதிபதி அதாவது தேவர்களின் சேனாதிபதி. ஆகையால் இவன் ஒரு போர் கடவுள் ஆவான் . முருகப்பெருமான் தர்காசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிதம்பரத்தில் உமாதேவியுடன் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.




முருகன் தன் அன்னை பார்வதியிடம் இருந்து அசுரனை அழிக்க வீர வேல் வாங்கிய நாள் இந்த தைப்பூச நாளாகும். இது தமிழ் மாதமான தை மாதம் வரும் முதல் பௌர்ணமி நாளில் பூச நட்சத்திரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக் கடனாக காவடி எடுத்துச் செல்வர் .அழகு குத்துதல் ,சர்க்கரை கா  வடி ,பறவை காவடி, பால் காவடி ,மச்சக்காவடி, மயில் காவடி ,தீர்த்த காவடி என பலவகை காவடிகளை சுமந்து கோவில்களுக்கு கால்நடையாக பக்தர்கள் நடந்து வருவார்கள்.


முருகப்பெருமான் ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால் கோபித்துக் கொண்டு சிவன் ,பார்வதி ,விநாயகர் விட்டு பண்டார கோலத்தில் பழனி மலையில் குடியேறிய நாளையே தைப்பூசம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


கேரளாவில் தைப்பூசம் தைப்பூயம் என்று அழைக்கப்படுகிறது கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு முருக பக்தர்கள் மயில் காவடி ,சந்தன காவடி ,சேவர் காவடி, அன்னக்காவடி ,வேல் காவடி ,பால் காவடி, வாள் காவடி ,விளக்கு காவடி, ஏந்தி முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபடுவர்.


பிப்ரவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் இருப்பதால், காலை முதல் மாலை வரை முருகப்பெருமானை நினைத்து மனதார வழிபட வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும் ,வசதி வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம் .தைப்பூச தினத்தன்று அரசு விடுமுறையாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.


தைப்பூசம் நேரம் 20 25 பிப்ரவரி 10 ம் தேதி பூசம் நட்சத்திரம் திங்கட்கிழமை மாலை 6 :01 மணி முதல் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:34 மணிக்கு முடிவடைகிறது. எனவே பூசம் நட்சத்திரம் நேரத்தில் தைப்பூச வழிபாடுகள் மேற்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்