உள்ளமெல்லாம் நீயாய்.. உயிர் நிறையும் முருகா!

Feb 01, 2026,10:33 AM IST

- வே.ஜெயந்தி


அழகையும் அன்பும்

அருளும் முருகா,


ஆனந்தமாய் வாழ

வழி காட்டும் முருகா.


இனிய குணம் தந்து

ஈகை மனம் தந்து,


உள்ளமெல்லாம் நீயாய்

உயிர் நிறையும் முருகா.


ஊக்கம் தந்து எங்களை

என்றென்றும் வாழ வைப்பாய்,




ஏக்கம் நீக்கி நெஞ்சின்

இருளெல்லாம் போக்குவாய்.


ஐயமே இல்லை 

நீயே தெய்வம் முருகா.


ஒய்யாரமாய் நிற்க

ஒளி தந்து காப்பாய்.


ஓய்வு இல்லாமல் வந்து

ஒரு நிழலாய் காப்பாய்,


ஔவையார் புகழ் பாடி

உலகம் வியந்த முருகா.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்