தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி , பழங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம். இவ்விழா மகாசங்கராந்தி விழாவாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டிற்கான மகாசங்கராந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். இங்குள்ள நந்தி பகவான் மிகவம் சிறப்புடையவர். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும் இக்கோவில் திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டது தான் இந்த நந்தி சிலை. 12 அடி உயரம், 19.5 அடி நீளம்,8.25 அடி அகலம் கொண்டது இந்த நந்தி சிலை.

ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இந்த நந்தி பகாவனுக்கு விழா நடைபெறும். இந்தாண்டிற்கான விழா இன்று நடைபெற்று பெற்றது. முதலில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2000 கிலோவில் மகா நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய்,கேரட், நெல்லிக்காய் போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம்,மாதுளை, கொய்யா போன்ற பழங்களும், லட்டு, அதிரசம், முறுக்கு, உலர்ந்த பழங்கள் மற்றும் மலர்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து நந்தி முன்னர் 108 பசுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. சந்தனம், குங்குமம் இடப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பசுவிற்கும் தனிதனியாக பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நடந்த இவ் பூஜையில் பசுக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட 2 டன் காய்கறி, பழங்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}