போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!

Apr 17, 2025,11:30 AM IST

விழுப்புரம்: நீதிமன்றத்தின் உத்தரவின் படி 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்பட்டது. 



விழுப்புரம் மாவட்டம் அருகே மேல்பாதி கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது பட்டியலின சமூக மக்கள் வழிபாடு செய்ததற்கு வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் கோவில் சீல் வைக்கப்பட்டது.


இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டது. 




இந்த நிலையில் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டம்  எஸ்பி சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


திரௌபதி அம்மன் கோவில் இன்று காலை 6:15 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பட்டியலின சமூக மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்