சென்னை: விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதாவது ஜூன் 22 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு கோட் படத்தின் "சின்ன சின்ன கண்கள்" என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இப்பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா, மோகன், அஜ்மல், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் விசில் போடு என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து சின்ன சின்ன கண்கள் என்ற இரண்டாவது பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளது.
நாளை விஜயின் ஐம்பதாவது பிறந்தநாள். இதையொட்டி இந்தப் பாடல் வருவது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. சின்ன சின்ன என்ற கோட் படத்தின் இரண்டாவது பாடல் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதற்காக நாளை விஜயின் பிறந்த முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது தவிர இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ள பாடல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளதால் கொண்டாட்டங்களுக்கு இப்போதிலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள தி கோட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இதற்கிடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய நிகழ்வில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}