சென்னை: விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதாவது ஜூன் 22 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு கோட் படத்தின் "சின்ன சின்ன கண்கள்" என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இப்பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா, மோகன், அஜ்மல், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் விசில் போடு என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து சின்ன சின்ன கண்கள் என்ற இரண்டாவது பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளது.
நாளை விஜயின் ஐம்பதாவது பிறந்தநாள். இதையொட்டி இந்தப் பாடல் வருவது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. சின்ன சின்ன என்ற கோட் படத்தின் இரண்டாவது பாடல் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதற்காக நாளை விஜயின் பிறந்த முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது தவிர இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ள பாடல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளதால் கொண்டாட்டங்களுக்கு இப்போதிலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள தி கோட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இதற்கிடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய நிகழ்வில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}