மனைவி மீது பாய்ந்த பனிக்கரடி.. அதன் மீது பாய்ந்த கணவர்.. துப்பாக்கியுடன் வந்த பக்கத்து வீட்டுக்காரர்

Dec 07, 2024,02:04 PM IST

டோரன்டோ: காணாமல் போன வளர்ப்பு நாயை தேடிச் சென்ற இடத்தில் பனிக்கரடி ஒன்று மனைவியை தாக்கிதால் ஆவேசமடைந்த கணவர், அந்த கரடி மீது பாய்ந்து அதனுடன் சண்டை போட்டு படுகாயமடைந்தார்.


கனடா நாட்டின் ஃபோர்ட் செவர்ன் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வளர்க்கும் நாயை காணாமல், அதைத் தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே பனிக்கரடி ஒன்று வந்து நின்றது. அந்த பனிக்கரடி எதிர்பாராத விதமாக மனைவியின் மீது பாய்ந்தது. 




இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஒரு நொடி கூட யோசிக்காமல், அந்தக் கரடியின் மீது பாய்ந்து மனைவியை காப்பாற்ற கடுமையாக போராடினார். இதில் கணவருக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர், பனிக்கரடி ஒருவரை தாக்கியதைப் பார்த்து உடனே தனது துப்பாக்கியை எடுத்து வந்து பனிக்கரடியை சுட்டுள்ளார். பனிக் கரடியை பலமுறை சுட்டதில் அந்த கரடி பயந்து அங்கிருந்து காட்டுக்குள் ஓடி விட்டது.


இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கை கால்களில் பலத்த காயமுற்ற நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சூடு பட்ட பனிக்கரடி  மீண்டும் நகருக்குள் வரும் என மக்கள் அச்சமடைந்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்காப்புக்காக சுட்டதில் காயமடைந்த கரடி காட்டுக்குள் சென்று இறந்து விட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


துருவக் கரடிகள் கடல் பனியில் இருக்கும் போது  வேட்டையாடி உணவை உண்ணும். ஆனால் இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தின் காரணமாக கடலின் பனி உடைந்ததால்  பனிக்கரடிகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பனிக்கரடிகள் உணவைத் தேடி உள் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. 


இதற்கிடையே, பனிக்கரடி தாக்கினால் நிச்சயமாக உயிரிழக்க மாட்டீர்கள்‌. அது ஒரு கட்டுக்கதை. அதனால் முடிந்தவரை போராடுங்கள் என அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்