தமிழ்நாட்டில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ..இந்திய வானிலை ஆய்வு மையம்!

May 05, 2025,10:09 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி பரவலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இதனால் மக்கள் வெப்ப அலையை  தாங்க முடியாமல் தவிர்ப்பிற்குள்ளாகினர். இதற்கிடையே நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கி காலை முதல் மாலை  வரை வெயில் உச்சமாக இருந்தது. பின்பு வானில் இடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. செங்கல்பட்டு, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது. இதனால் தமிழகத்தில் தற்போது வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது. 




கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் கடலூரில் 4 சென்டிமீட்டர், ஏற்காடு மற்றும் சிதம்பரத்தில் தலா 3.5 சென்டிமீட்டர், மணல்மேட்டில் 3 சென்டிமீட்டர், பெரம்பலூரில் 2.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்: 


நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, ஆகிய 7 மாவட்டங்களில் காலை  10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்