தமிழ்நாட்டில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ..இந்திய வானிலை ஆய்வு மையம்!

May 05, 2025,10:09 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி பரவலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இதனால் மக்கள் வெப்ப அலையை  தாங்க முடியாமல் தவிர்ப்பிற்குள்ளாகினர். இதற்கிடையே நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கி காலை முதல் மாலை  வரை வெயில் உச்சமாக இருந்தது. பின்பு வானில் இடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. செங்கல்பட்டு, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது. இதனால் தமிழகத்தில் தற்போது வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது. 




கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் கடலூரில் 4 சென்டிமீட்டர், ஏற்காடு மற்றும் சிதம்பரத்தில் தலா 3.5 சென்டிமீட்டர், மணல்மேட்டில் 3 சென்டிமீட்டர், பெரம்பலூரில் 2.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்: 


நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, ஆகிய 7 மாவட்டங்களில் காலை  10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்