சென்னை: உங்கள் வாழ்க்கையில் ஒருவரை கடவுள் துண்டித்துவிட்டால், அதன் மதிப்பை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பின்னர் நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி அழுவீர்கள் என இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன், தமிழ் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆகி பின்னர் காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் இயக்குனராக வலம் வந்தார். இப்படத்தில் முதல் முதலாக அறிமுகமான நடிகர் தனுஷ் செல்வராகவனின் தம்பி ஆவார். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் திகழ்ந்தார்.
இதற்கிடையே இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு கீதாஞ்சலி ராமன் என்பவரை இரண்டாவதாக மணந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து வெற்றி இயக்குனராக திகழ்ந்த செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், போன்ற படங்கள் மூலமாக தன்னை நடிகராகவும் நிலை நிறுத்தினார்.
இப்படி பன்முகத் திறமைகளைப் பெற்ற செல்வராகவன் சமீப காலமாகவே தனது வாழ்க்கை அனுபவங்களை தத்துவமாக அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதாவது "அனுபவம் தத்துவமல்ல" என்ற தலைப்பில் இவர் பதிவிடும் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது .
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சுவாரஸ்யமான தத்துவத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், உங்கள் வாழ்க்கையில் ஒருவரை கடவுள் துண்டித்துவிட்டால், அதன் மதிப்பை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பின்னர் நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி அழுவீர்கள் என பதிவிட்டுள்ளார்.
அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் தம்பியான தனுஷ் நடித்து வந்த நிலையில், தற்போது தம்பி தனுஷ் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நலம் காக்கும் ஸ்டாலின்.. உங்கள் குடும்பத்தின் நலன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!
கிராமங்களில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை: தமிழக அரசு!
அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்!
பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
மோடியா இந்த லேடியா என்று கேட்டு அதிர விட்டவர் ஜெயலலிதா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஓபிஎஸ்!
மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை
பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!
மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!
{{comments.comment}}