உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

Apr 04, 2025,06:48 PM IST

சென்னை: உங்கள் வாழ்க்கையில் ஒருவரை கடவுள் துண்டித்துவிட்டால், அதன் மதிப்பை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பின்னர் நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி அழுவீர்கள் என இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் பதிவிட்டுள்ளார். 


இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன், தமிழ் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆகி பின்னர் காதல் கொண்டேன் திரைப்படம்  மூலம் இயக்குனராக வலம் வந்தார். இப்படத்தில் முதல் முதலாக அறிமுகமான நடிகர் தனுஷ் செல்வராகவனின் தம்பி ஆவார். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில்  சிறந்த இயக்குனராகவும் திகழ்ந்தார்.


இதற்கிடையே  இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு கீதாஞ்சலி ராமன் என்பவரை இரண்டாவதாக மணந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து வெற்றி இயக்குனராக திகழ்ந்த செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், போன்ற படங்கள் மூலமாக தன்னை நடிகராகவும் நிலை நிறுத்தினார்.




இப்படி பன்முகத் திறமைகளைப் பெற்ற செல்வராகவன் சமீப காலமாகவே தனது வாழ்க்கை அனுபவங்களை தத்துவமாக அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதாவது  "அனுபவம் தத்துவமல்ல"  என்ற தலைப்பில் இவர் பதிவிடும் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது .


அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சுவாரஸ்யமான தத்துவத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், உங்கள் வாழ்க்கையில் ஒருவரை கடவுள் துண்டித்துவிட்டால், அதன் மதிப்பை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பின்னர் நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி அழுவீர்கள் என  பதிவிட்டுள்ளார். 


அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் தம்பியான தனுஷ் நடித்து வந்த நிலையில், தற்போது தம்பி தனுஷ் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில்  செல்வராகவன் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்