சென்னை: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என மழையில் தத்தளிக்கும் சென்னையின் நிலைமையை பார்த்து ஆதங்கப்பட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுகவை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வட கிழக்கு பருவ மழை சீசனிலேயே நேற்றுதான் மிகப் பெரிய அளவிலான கன மழையை சென்னை சந்தித்தது. கடந்த தென் மேற்குப் பருவ மழைக்காலத்திலும், நடப்பு சீசனிலும் கூட நேற்று வரை பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தப்பியது சென்னை. ஆனால், சென்னையில் நேற்று திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அடித்து பெய்த மழையால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடானது.

மிகப் பெரிய அளவிலான கன மழை கொட்டித் தீர்த்ததாலும், மேற்கு மாம்பலம் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இருப்பினும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி மற்றும் துரித நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வேகமாக இறங்கி விட்டது. சில இடங்களில் மட்டும் நீர் வடியவில்லை.
பெரும்பாலான இடங்களில் கால்வாய் அடைப்புகள் சரிவர எடுக்கப்படாமல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக சென்னை வாசிகள் தண்ணீர் வாசிகளாக மாறி வீட்டிற்குள் நிற்கும் நீருக்கு மத்தியில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.
அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் மலை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும் மழை நீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள்.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, வெள்ள நிவாரணப் பணியில் கடை நிலை ஊழியர்கள் முதல் மேல் நிலை அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இரவு நேரத்திலும் களத்திற்கு வருகிறார்கள். அதைப் பாராட்ட வேண்டும். அதேசமயம், அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர் செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்று தான் பொருள்.
சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாக கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}