- அ.வென்சி ராஜ்
தாயின் கருவறை திறந்து...
இத்தரணி வந்ததுமே
அழுகையோடு பயணம் தொடங்கும் மனிதன்...
புவியில் வாழ்நாள் முடிந்து...
தன் கல்லறை திறந்து உள் செல்லும் பொழுது கூட
தன்னோடு இருப்பவரை அழ வைத்து விட்டல்லவா செல்கின்றான்...
அழுகையோடு பிறந்து..
அழுகையோடே மரணிக்கும்...
மனித வாழ்வில்...
இடையிடையே தான் எத்தனை வகையான அழுகைகள்...

தாயிடம் பால் கேட்க உரிமையோடு ஒரு அழுகை..
நினைத்ததை சாதிக்க நிச்சயம் இல்லாமல் ஒரு அழுகை...
சகோதரனின் செல்ல அடிக்கு சிணுங்கலாய் ஒரு அழுகை...
வம்பு செய்யும் தங்கையை மாட்டி விட கண்ணீர் வராமல் சும்மா நடித்திட ஒரு அழுகை....
அம்மாவின் அன்பை பெற அப்பப்போ சிறு அழுகை...
அப்பாவின் அரவணைப்பிற்காய் அடிக்கடி வரும் அழுகை..
திருமணமான பெண்களுக்கோ திடுக்கென்று வரும் அழுகை...
ஆண் குலம் அத்தனை பேரும் வெளியில் தெரிந்திடாமல் மனதிற்குள் அழும் மௌன அழுகை..
உண்மையான உறவொன்றை இழந்ததனால் உயிர் துடிக்க வரும் அழுகை...
துக்க வீட்டில் சிலருக்கு மட்டும் அப்பப்போ வரும் கடமைக்காய் ஒரு அழுகை..
நினைத்ததை சாதிக்க சுட்டிகளுக்கும் குட்டிகளுக்கும் எப்பொழுதுமே ஆயுதம் அழுகை...
அன்பிற்கொரு அழுகை...
உரிமைக்காய் ஒரு அழுகை..
நடிப்பிற்கு ஒரு அழுகை..
நகைப்பிற்கு ஒரு அழுகை..
கடமைக்கு ஒரு அழுகை ...
கண்ணியமாய் ஒரு அழுகை...
இத்தனை அழுகையையும் பின் தள்ளி, அழுகையும் அழகாகும் அத்தருணம் சொல்லிடவா...
தித்திப்பாய் உளம் இனித்து...
செந்தூரம் போல் முகம் சிவந்து...
கண்கள் முழுதும் மகிழ்ச்சி நிறைந்து...
ஆனந்த கண்ணீருடன் கூடிய மகிழ்வழுகை...
எப்பொழுதும் உம் கண்ணில் ஆனந்த கண்ணீர் நிறைந்திடவே தித்திக்கும் மனதுடனே. ..
தெவிட்டாமல் வாழ்த்துகிறேன். . .
உங்கள் அழுகையும் அழகாக அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
அதிசயம்!
மனிதனுக்கு பாடம் சொன்ன காகம் (சிறார் கதை)
மனம்...!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அன்று பல்லவர் பூமி.. இன்று பலரது பூமி.. சீர்மிகு செங்கல்பட்டு!
பெண் பிள்ளைகள் - இந்த மண் பிள்ளைகள்.. தேசிய பெண் குழந்தைகள் தினம்!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}