அன்பிற்கொரு அழுகை... உரிமைக்காய் ஒரு அழுகை..!

Nov 25, 2025,10:42 AM IST

- அ.வென்சி ராஜ்


தாயின் கருவறை திறந்து...

இத்தரணி வந்ததுமே 

அழுகையோடு பயணம் தொடங்கும் மனிதன்...

புவியில் வாழ்நாள் முடிந்து...

தன் கல்லறை திறந்து உள் செல்லும் பொழுது கூட 

தன்னோடு இருப்பவரை அழ வைத்து விட்டல்லவா செல்கின்றான்...


அழுகையோடு பிறந்து..

அழுகையோடே  மரணிக்கும்...

மனித வாழ்வில்...

இடையிடையே தான் எத்தனை  வகையான அழுகைகள்... 




தாயிடம் பால் கேட்க உரிமையோடு ஒரு அழுகை..

நினைத்ததை சாதிக்க நிச்சயம் இல்லாமல் ஒரு அழுகை...

சகோதரனின்  செல்ல அடிக்கு சிணுங்கலாய் ஒரு அழுகை...

வம்பு செய்யும் தங்கையை மாட்டி விட கண்ணீர் வராமல் சும்மா நடித்திட ஒரு அழுகை.... 


அம்மாவின் அன்பை பெற  அப்பப்போ சிறு அழுகை...

அப்பாவின் அரவணைப்பிற்காய் அடிக்கடி வரும் அழுகை..

திருமணமான பெண்களுக்கோ திடுக்கென்று வரும் அழுகை... 


ஆண் குலம் அத்தனை பேரும் வெளியில் தெரிந்திடாமல் மனதிற்குள் அழும் மௌன அழுகை.. 

உண்மையான  உறவொன்றை  இழந்ததனால் உயிர் துடிக்க வரும் அழுகை... 

துக்க வீட்டில் சிலருக்கு மட்டும்  அப்பப்போ வரும் கடமைக்காய் ஒரு அழுகை.. 

நினைத்ததை சாதிக்க சுட்டிகளுக்கும் குட்டிகளுக்கும் எப்பொழுதுமே ஆயுதம் அழுகை... 


அன்பிற்கொரு அழுகை...

உரிமைக்காய் ஒரு அழுகை.. 

நடிப்பிற்கு ஒரு அழுகை..

நகைப்பிற்கு ஒரு அழுகை..

கடமைக்கு ஒரு அழுகை ... 

கண்ணியமாய் ஒரு அழுகை...


இத்தனை அழுகையையும் பின் தள்ளி, அழுகையும் அழகாகும் அத்தருணம் சொல்லிடவா... 


தித்திப்பாய் உளம் இனித்து...

செந்தூரம் போல் முகம் சிவந்து...

கண்கள் முழுதும் மகிழ்ச்சி நிறைந்து...

ஆனந்த கண்ணீருடன் கூடிய மகிழ்வழுகை... 


எப்பொழுதும் உம் கண்ணில் ஆனந்த கண்ணீர் நிறைந்திடவே தித்திக்கும்  மனதுடனே. ..

தெவிட்டாமல் வாழ்த்துகிறேன். . . 


உங்கள் அழுகையும் அழகாக அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்