முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!

Nov 22, 2025,12:24 PM IST

- அ. வென்சி ராஜ்


பள்ளி விட்டு வெளியில் வந்தேன்..

வான் மகளின் மழை எனும் தோரணம் பார்த்து...

மனம் மகிழ்ந்தேன்...

இருந்தாலும் பொதுவெளியில்...

பயணிக்க வேண்டுமே என்று...

மழைக்கான உடையணிந்து வாகனத்தை கிளப்பியதுதான்....


சொட்டு சொட்டாய் நீர் துளிகள்...

குளிர்ந்த காற்றுடனே...

என் பட்டு முகத்தில் பட்டதுமே...

பறந்து போனது டென்ஷன் எல்லாம்...

முத்து முத்தாய் முகத்திலே நீ ...

முட்டி நின்று பார்த்ததனால்...

புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...

என் முகமும் ஆனதுவே....




எனதருமை மழைத்துளியே...

எங்கிருந்து வந்தாயோ... 

எட்டி நின்று பார்க்கும்போது. ..

இருந்த அழகை விட..

கிட்ட வந்து உன்னை தொட்டதும்.. 

சாதாரண பெண் இவளை கவிதை எழுத வைத்து விட்டாய்... 


பார்த்ததற்கு ஒரு கவிதை. ..

என் மேல் பட்டதற்கு ஒரு கவிதை...

உனை நானும் தொட்டதற்கு ஒரு கவிதை...

உனை விட்டதற்கு ஒரு கவிதை...

என...

உன்னை பற்றி மட்டுமே  எப்பொழுதும்

அடைமழையாய்  என்றும்

எழுதிக் கொண்டே இருப்பேனோ. ..

என் மேல் விழுந்த மழைத்துளியே... !


(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,  சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அத்தே.. அத்தே...!

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!

news

சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!

news

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

news

நான் விரும்பும் வகுப்பறை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்

அதிகம் பார்க்கும் செய்திகள்