மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!

Nov 21, 2025,12:38 PM IST

- தி.சந்தனமேரி


புல்வெளி மரங்கள்

பச்சைப் புடவையால் அலங்கரித்துக் கொண்டிட

செடி கொடிகள்

மலர்க்கிரீடங்களால்

மணம் கமழ்ந்திட ...

சாலைகள் தம்மை

தாமே தூய்மையாக்கி

மெருகூட்டிக் கொண்டிட...

மலையருவி மின்னும் 

வெள்ளி முத்துச்சரம்




அணிந்து அழகூட்டிட...

நடனமங்கையராம் மயில்கள்

தாளத்துடன் தோகைவிரித்து

நேர்த்தியாய் நடனமாடிட...

ஆறு குளங்கள்

தமது நிறைவின்

அழகை வெளிப்படுத்திட...

மாலுமிகளாய் மாறி

மழலைகள்

ஓடும் நீரிலே 

கப்பல் விட்டிட...

பள்ளிச் சிறார்கள் 

மழை விடுமுறையின்

மகிழ்வினை வெளிப்படுத்திட...

விவசாயிகள் பயிர்களின்

செழிப்பைக் கண்டு

மனம் நெகிழ்ந்திட...

இப்புவியின் அழகுக்கலை வல்லுநராம்

மழையிடம் வரிசைகட்டி நின்றனர்

எங்கும்  மகிழ்ச்சி!

என்ற தட்சணையுடன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்