மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!

Nov 21, 2025,12:38 PM IST

- தி.சந்தனமேரி


புல்வெளி மரங்கள்

பச்சைப் புடவையால் அலங்கரித்துக் கொண்டிட

செடி கொடிகள்

மலர்க்கிரீடங்களால்

மணம் கமழ்ந்திட ...

சாலைகள் தம்மை

தாமே தூய்மையாக்கி

மெருகூட்டிக் கொண்டிட...

மலையருவி மின்னும் 

வெள்ளி முத்துச்சரம்




அணிந்து அழகூட்டிட...

நடனமங்கையராம் மயில்கள்

தாளத்துடன் தோகைவிரித்து

நேர்த்தியாய் நடனமாடிட...

ஆறு குளங்கள்

தமது நிறைவின்

அழகை வெளிப்படுத்திட...

மாலுமிகளாய் மாறி

மழலைகள்

ஓடும் நீரிலே 

கப்பல் விட்டிட...

பள்ளிச் சிறார்கள் 

மழை விடுமுறையின்

மகிழ்வினை வெளிப்படுத்திட...

விவசாயிகள் பயிர்களின்

செழிப்பைக் கண்டு

மனம் நெகிழ்ந்திட...

இப்புவியின் அழகுக்கலை வல்லுநராம்

மழையிடம் வரிசைகட்டி நின்றனர்

எங்கும்  மகிழ்ச்சி!

என்ற தட்சணையுடன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்