மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!

Nov 21, 2025,12:38 PM IST

- தி.சந்தனமேரி


புல்வெளி மரங்கள்

பச்சைப் புடவையால் அலங்கரித்துக் கொண்டிட

செடி கொடிகள்

மலர்க்கிரீடங்களால்

மணம் கமழ்ந்திட ...

சாலைகள் தம்மை

தாமே தூய்மையாக்கி

மெருகூட்டிக் கொண்டிட...

மலையருவி மின்னும் 

வெள்ளி முத்துச்சரம்




அணிந்து அழகூட்டிட...

நடனமங்கையராம் மயில்கள்

தாளத்துடன் தோகைவிரித்து

நேர்த்தியாய் நடனமாடிட...

ஆறு குளங்கள்

தமது நிறைவின்

அழகை வெளிப்படுத்திட...

மாலுமிகளாய் மாறி

மழலைகள்

ஓடும் நீரிலே 

கப்பல் விட்டிட...

பள்ளிச் சிறார்கள் 

மழை விடுமுறையின்

மகிழ்வினை வெளிப்படுத்திட...

விவசாயிகள் பயிர்களின்

செழிப்பைக் கண்டு

மனம் நெகிழ்ந்திட...

இப்புவியின் அழகுக்கலை வல்லுநராம்

மழையிடம் வரிசைகட்டி நின்றனர்

எங்கும்  மகிழ்ச்சி!

என்ற தட்சணையுடன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்