- தி.சந்தனமேரி
புல்வெளி மரங்கள்
பச்சைப் புடவையால் அலங்கரித்துக் கொண்டிட
செடி கொடிகள்
மலர்க்கிரீடங்களால்
மணம் கமழ்ந்திட ...
சாலைகள் தம்மை
தாமே தூய்மையாக்கி
மெருகூட்டிக் கொண்டிட...
மலையருவி மின்னும்
வெள்ளி முத்துச்சரம்

அணிந்து அழகூட்டிட...
நடனமங்கையராம் மயில்கள்
தாளத்துடன் தோகைவிரித்து
நேர்த்தியாய் நடனமாடிட...
ஆறு குளங்கள்
தமது நிறைவின்
அழகை வெளிப்படுத்திட...
மாலுமிகளாய் மாறி
மழலைகள்
ஓடும் நீரிலே
கப்பல் விட்டிட...
பள்ளிச் சிறார்கள்
விவசாயிகள் பயிர்களின்
செழிப்பைக் கண்டு
மனம் நெகிழ்ந்திட...
இப்புவியின் அழகுக்கலை வல்லுநராம்
மழையிடம் வரிசைகட்டி நின்றனர்
எங்கும் மகிழ்ச்சி!
என்ற தட்சணையுடன்.
தமிழ்நாட்டின் பசுமைப் புரட்சிக்கான முன்னோடி.. ஜான் பென்னிகுயிக்
இணைவோம்.. கொண்டாடுவோம்.. Get together
எனக்கு நானே சிறந்த தோழி.. I am the best friend of me
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
விடுவிக்கப்படாத புதிர்கள்... Unanswered Riddles!
யார் உண்மையான கடவுள் தெரியுமா?
மண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா.. இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
வில்லங்கமாக பேசிய விஸ்வநாதன்.. அமைதியாக பதிலடி கொடுத்த நடிகர் சூரி!
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
{{comments.comment}}