- க. யாஸ்மின் சிராஜூதீன்
தொழிலாளர் தினமாம் மே ஒன்று
பல இன்னல்களுக்குப்பின் கிடைத்த கற்கண்டு....
சிங்காரவேலர் கொண்டாடிய தொழிலாளர் தினம்
மெரினா கடற்கரையிலே கம்பீரமான நினைவிடம்....
தொழிலாளி இல்லாத
துறையில்லை
தொழிலாளி இல்லாமல்
உலகில்லை......
செய்யும் தொழிலே தெய்வம்
தொழிலாளியே அச்சாணி...

தொழிலில் ஏற்றத்தாழ்வு இல்லை
தேவைப்படும் போது
தேடப்படுவார்கள்...
தொழிலாளியின் வியர்வை காயுமுன்னே
ஊதியம் அளித்திட வேண்டும்...
ஒருவரின் பொழுதுபோக்கு செலவு
மற்றொருவரின் வீட்டுச்செலவு....
மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்
உழைப்பினை ஊக்கப்படுத்திட வேண்டும்....
தொழிலாளர் தினம்
தொழிலாளர்களுக்கு கிடைத்த வரம்.....
தடையினை உடைத்திடு
உழைப்பினை அளித்திடு...
சிகரம் தொட்டு சிறகை விரித்து பறந்திடு ....
செய்யும் தொழிலை
வணங்கிடுவோம்
தேசம் சிறக்க வாழ்ந்திடுவோம்...
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}