இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்

Mar 03, 2026,06:20 PM IST

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக ஆளும் திமுக அரசு மீது தமிழக வெற்றிக் கழகத் (தவிக) தலைவர் விஜய் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் திங்கட்கிழமை இரவு, இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல், தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் மீது நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடூரத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."




உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட விஜய், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து திமுக அரசை நோக்கிப் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த விஜய், "உலகத் தரத்திற்கு இணையாகச் செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் இந்த ஆட்சியில், சாதாரண குடிமக்களின் பாதுகாப்பிற்கு எங்கே உத்தரவாதம் உள்ளது? இந்தியாவின் முதன்மை மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) எங்கே இருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


தன்னை 'நம்பர் ஒன்' என்று பெருமை பேசிக்கொள்ளும் இந்த அரசு, வன்முறைக் கும்பல்கள் இவ்வளவு சுதந்திரமாக நடமாட அனுமதித்தது எப்படி என்பதை விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "இதுதான் ஒரு பொறுப்பான நிர்வாகத்தின் சட்டம் ஒழுங்கு தரமா?" என்றும் அவர் சாடினார். தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்களால் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த ஆட்சி தூக்கியெறியப்படும் என்றும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்