சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாளை வாக்குப்பதிவு நாளன்று தமிழ்நாட்டு திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்பதை கருத்தில் கொண்டு நாளை தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1168 திரையரங்குகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் நாளை மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. இது உங்கள் கடமை உரிமை..மறவாதீர்!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}