சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாளை வாக்குப்பதிவு நாளன்று தமிழ்நாட்டு திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்பதை கருத்தில் கொண்டு நாளை தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1168 திரையரங்குகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் நாளை மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. இது உங்கள் கடமை உரிமை..மறவாதீர்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}