சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாளை வாக்குப்பதிவு நாளன்று தமிழ்நாட்டு திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்பதை கருத்தில் கொண்டு நாளை தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1168 திரையரங்குகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் நாளை மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. இது உங்கள் கடமை உரிமை..மறவாதீர்!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}