சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாளை வாக்குப்பதிவு நாளன்று தமிழ்நாட்டு திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்பதை கருத்தில் கொண்டு நாளை தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1168 திரையரங்குகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் நாளை மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. இது உங்கள் கடமை உரிமை..மறவாதீர்!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}