டெல்லி: 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறப் போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாகவும், அது 2026 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. கேபிடல் டிவி என்ற அந்த யூடியூப் சேனலில் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற உள்ளதாக ஒரு வீடியோ வெளியானது.
அந்த வீடியோ வைரலாக பரவியதால், பலரும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறதா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் இது தவறான தகவல் என்றும், ரிசர்வ் வங்கி இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் பிஐபி உண்மைச் சரிபார்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஐபி உண்மைச் சரிபார்ப்பு கூறுகையில், ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், நாடு முழுவதும் அவை தொடர்ந்து வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ தவறானது என்றும், எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் அல்லது ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையும் அதை ஆதரிக்கவில்லை என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த ஊகம் ஏப்ரல் 2025 இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையால் ஏற்பட்டிருக்கலாம். அந்த சுற்றறிக்கையில், வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) ஏடிஎம்கள் மூலம் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை எளிதாக கிடைக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தவறாமல் விநியோகிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 30, 2025க்குள்: அனைத்து ஏடிஎம்களில் 75% ஏடிஎம்களிலாவது ஒரு கேசட்டில் 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள்: அனைத்து ஏடிஎம்களில் 90% ஏடிஎம்களிலாவது ஒரு கேசட்டில் 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரூ. 500 நோட்டுக்கள் திரும்பப் பெறப் போவதாக வந்துள்ள செய்திகள் தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது...உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிபரம்
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி: எம்.பி.சு.வெங்கடேசன் மகிழ்ச்சி!
பாஜக உடன் கூட்டணியா? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்ன பதில்
ஐபிஎல்.,ல் வெளிப்பட்ட திறமை...ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்தது ஜாக்பாட்
கூகுளின் வருங்கால சிஇஓ.,க்கள்...சுந்தர் பிச்சை சொல்ல வந்த விஷயம் புரியுதா?
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரகசியமாக காய் நகர்த்தும் கட்சி தலைமை
வருங்கால தலைமுறைக்கு இளையராஜாவின் இசையே அருமருந்து: அண்ணாமலை
அடுத்த மேட்ச் பிக்சிங் பீகாரில் தான்.. பாஜக, தேர்தல் ஆணையம் மீது பாயும் ராகுல் காந்தி
பூக்காரம்மா!
{{comments.comment}}