Fact Check: 500 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறப் போகிறதா ரிசர்வ் வங்கி.. உண்மை என்ன?

Jun 07, 2025,05:32 PM IST

டெல்லி: 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறப் போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


ஒரு யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாகவும், அது 2026 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.  கேபிடல் டிவி என்ற அந்த யூடியூப் சேனலில் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற உள்ளதாக ஒரு வீடியோ வெளியானது.


அந்த வீடியோ வைரலாக பரவியதால், பலரும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறதா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் இது தவறான தகவல் என்றும், ரிசர்வ் வங்கி இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் பிஐபி உண்மைச் சரிபார்ப்பு தெரிவித்துள்ளது.




இதுகுறித்து பிஐபி உண்மைச் சரிபார்ப்பு கூறுகையில், ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், நாடு முழுவதும் அவை தொடர்ந்து வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வீடியோ தவறானது என்றும், எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் அல்லது ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையும் அதை ஆதரிக்கவில்லை என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.


இருப்பினும், இந்த ஊகம் ஏப்ரல் 2025 இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையால் ஏற்பட்டிருக்கலாம். அந்த சுற்றறிக்கையில், வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) ஏடிஎம்கள் மூலம் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.


பொதுமக்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை எளிதாக கிடைக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தவறாமல் விநியோகிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும், செப்டம்பர் 30, 2025க்குள்: அனைத்து ஏடிஎம்களில் 75% ஏடிஎம்களிலாவது ஒரு கேசட்டில் 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள்: அனைத்து ஏடிஎம்களில் 90% ஏடிஎம்களிலாவது ஒரு கேசட்டில் 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அந்த வகையில் ரூ. 500 நோட்டுக்கள் திரும்பப் பெறப் போவதாக வந்துள்ள செய்திகள் தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்

news

வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

news

கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி

news

ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு

news

ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்

news

தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?

news

திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்

news

துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்

news

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை

அதிகம் பார்க்கும் செய்திகள்