டெல்லி: 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறப் போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாகவும், அது 2026 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. கேபிடல் டிவி என்ற அந்த யூடியூப் சேனலில் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற உள்ளதாக ஒரு வீடியோ வெளியானது.
அந்த வீடியோ வைரலாக பரவியதால், பலரும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறதா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் இது தவறான தகவல் என்றும், ரிசர்வ் வங்கி இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் பிஐபி உண்மைச் சரிபார்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஐபி உண்மைச் சரிபார்ப்பு கூறுகையில், ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், நாடு முழுவதும் அவை தொடர்ந்து வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ தவறானது என்றும், எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் அல்லது ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையும் அதை ஆதரிக்கவில்லை என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த ஊகம் ஏப்ரல் 2025 இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையால் ஏற்பட்டிருக்கலாம். அந்த சுற்றறிக்கையில், வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) ஏடிஎம்கள் மூலம் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை எளிதாக கிடைக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தவறாமல் விநியோகிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 30, 2025க்குள்: அனைத்து ஏடிஎம்களில் 75% ஏடிஎம்களிலாவது ஒரு கேசட்டில் 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள்: அனைத்து ஏடிஎம்களில் 90% ஏடிஎம்களிலாவது ஒரு கேசட்டில் 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரூ. 500 நோட்டுக்கள் திரும்பப் பெறப் போவதாக வந்துள்ள செய்திகள் தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}