தனுஷ் போட்ட வழக்கு.. நாங்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதில்!

Nov 29, 2024,05:16 PM IST

சென்னை: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை என நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.




இந்த ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் வொண்டர் பார் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடிகர் தனுசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை நயன்தாரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்தநிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நயன்தாரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.


இந்த நிலையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நானும் ரவடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை. பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. இதில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இது ஒரு மீறல் அல்ல என்று நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் சார்பாக வழக்கறிஞர் பதில் தெரிவித்துள்ளார். தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்