வெள்ளம் பாதித்த பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்படாது.. அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

Dec 18, 2023,04:58 PM IST

தூத்துக்குடி: கனமழையால் தென்மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் பால் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளதால் பால் தட்டுப்பாடு ஏற்படாது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 


பொதுமக்களுக்கு  தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை செய்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் அமைச்சர்களை நேரடியாக கலத்திற்கு  அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 




இந்நிலையில் வெள்ளம் பாதிப்புக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தேவையான அளவிற்கு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.


கூடுதல் கையிருப்பு வைப்பதற்காக ஈரோடு, அம்மாபாளையம், சேலம், அம்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து 20 மெட்ரிக் டன் பால் பவுடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் எந்த தட்டுப்பாடும் ஏற்படாமல் விநியோகிக்கப்பட அந்தந்த மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்