ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் மற்றவர்களை எரிச்சலடையச் செய்யும் குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் சுயநலவாதிகளாகவும், கிண்டல் செய்பவர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருக்கலாம். இதனால் மற்றவர்கள் அவர்களுடன் பழகுவது கடினமாகிறது. இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை கோபப்படுத்தும் பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
அவங்க யாருன்னு பார்ப்போமா!
1. மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் கணிக்க முடியாதவர்களாக இருப்பதால், அவர்கள் மற்றவர்களை எரிச்சலடையச் செய்கிறார்கள். அடிக்கடி மனதை மாற்றிக் கொள்வார்கள். இதனால் மற்றவர்கள் குழப்பம் அடைவார்கள். எதிலும் ஒருமுகமாக இருக்க மாட்டார்கள். இதனால் அவர்களை நம்புவது கடினம். அவர்களின் அவசர முடிவுகள் மற்றும் கோபம் ஆகியவை பிரச்சினையை அதிகமாக்கலாம். இது வாக்குவாதங்களுக்கும், தவறான புரிதல்களுக்கும் வழிவகுக்கும். அவர்களின் இந்த குணத்தால் உறவுகள் பாதிக்கப்படலாம்.
2. சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் துடிப்பானவர்கள். ஆனால் அவர்கள் சில நேரங்களில் மற்றவர்களை அதிகமாக
டாமினேட் செய்வார்கள். தங்களைப் பற்றி அதிகமாக நினைப்பவர்களாகவும், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டே இருப்பார்கள்.
3. கடகம்:
கடக ராசிக்காரர்கள் அன்பானவர்களாகவும், அக்கறை உள்ளவர்களாகவும் இருந்தாலும், அவர்கள் சில நேரங்களில் கட்டுப்படுத்துபவர்களாகவும், தேவைக்கு அதிகமாக ஒட்டிக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். எதையும் ரொம்ப பெர்சனலாக எடுத்துக்கொள்வார்கள். மன வருத்தம் ஏற்பட்டால் மனதிலேயே வைத்திருப்பார்கள். இது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
4. மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்கள் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். பொறுமை இல்லாமல் எதையும் செய்வதால், குழப்பம் ஏற்படலாம். அவர்கள் மிகவும் போட்டி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். அவர்கள் எடுக்கும் அவசர முடிவுகள் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். அவர்கள் எளிதில் கோபப்படுவார்கள். இதனால் மற்றவர்கள் அவர்களுடன் நிம்மதியாக இருக்க முடியாது.
5. விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களை சரியாக கணிக்க முடியாது. மிகவும் சீரியஸானவர்கள். அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதிலும், ரகசியங்களை காப்பாற்றுவதிலும் திறமையானவர்கள். இதனால் மற்றவர்கள் அவர்களை நம்புவது கடினம். அவர்கள் மற்றவர்களை துருவித் துருவி கேள்வி கேட்பார்கள். இது மற்றவர்களை எரிச்சலடையச் செய்யலாம்.
6. கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் விமர்சிப்பவர்களாகவும், தங்களை உயர்வாக நினைப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார்கள். இது மற்றவர்களை எரிச்சலடையச் செய்யலாம். அவர்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் அதிகமாக சிந்தித்து, தவறுகளை கண்டுபிடிப்பதால், மற்றவர்கள் விரக்தி அடையலாம். அவர்கள் எல்லாவற்றிலும் சரியானதை எதிர்பார்க்கிறார்கள். இதனால் ஏமாற்றம் அடையலாம்.
சரி நீங்க எப்படி பிரண்ட்ஸ்.. கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்களேன்.. தெரிஞ்சுப்போம்!
என்று கனவு நனவாகும்...?
இயற்கை அழகு கொஞ்சும் கூமாபட்டி .. எங்கங்க இருக்கு இந்த ஊரு.. இப்படி போட்டு படுத்தறாய்ங்களே!
கோடை விடுமுறையில் பள்ளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான்.. அவர் எடுப்பதே இறுதி முடிவு: ராஜேந்திர பாலாஜி!
நிதி ஒதுக்கீடு... தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதி: சீமான்!
யாருக்காகவும் காத்திருக்காதீர்கள்.. உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்!
வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... தங்கம் விலை இன்றும் குறைவு!
ஈரான் மதத் தலைவர் கமேனியைக் கொல்ல கடுமையாக முயன்றோம்.. முடியவில்லை.. இஸ்ரேல் ஒப்புதல்
ரோட்டு கடை தக்காளி தண்ணீர் சட்னி.. வாங்க வாங்க.. வந்து டேஸ்ட் பாருங்க!
{{comments.comment}}