திருக்குறள் – தித்திக்கும் மருந்து!

Jan 16, 2026,03:22 PM IST

- தி. மீரா


நோய்க்கு மருந்தாய் நெஞ்சில் இறங்கும்,

நூறாண்டு சிந்தனையின் நறுமணம்.

சொல்லில் சிறியது; பொருளில் பெரிது,

சோர்வை தீர்க்கும் சீரிய அறிவு.

வாழ்க்கை வலிகளில் வழிகாட்டும்,

வழுவாமல் நடத்தும் ஒளிவிளக்கு.

இனிப்பாய் தித்தித்து நாவில் அமரும்,

இடரிலும் தைரியம் ஊட்டும் மருந்து.

அரசனுக்கும் அடியவர்க்கும் ஒரே அளவு,

அறத்திற்கான அளவுகோல்.

உடலுக்குப் பசி போல் உள்ளத்திற்கும்,

திருக்குறள் தேவை  தினசரி உணவு.




கசப்பான உண்மையையும் கனியாக்கி,

கருணையோடு சொல்லும் கலை.

காலம் மாறினாலும் கருத்து மாறாது,

காலத்தை வெல்லும் நியதி.

மனமருந்தாய் மௌனத்தில் பேசும்,

மனிதனை மனிதனாக்கும் நூல்.

ஒரு குறளில் உலகம் அடங்கும்,

அறத்தின் அகில அகராதி.

படித்தால் போதும் பாதை தெரியும்,

பின்பற்றினால் பயணம் இனிது.

நாவில் இனிப்பு, நெஞ்சில் வலிமை,

திருக்குறள் — தித்திக்கும் மருந்து.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்