திருக்குறள் – தித்திக்கும் மருந்து!

Jan 16, 2026,03:22 PM IST

- தி. மீரா


நோய்க்கு மருந்தாய் நெஞ்சில் இறங்கும்,

நூறாண்டு சிந்தனையின் நறுமணம்.

சொல்லில் சிறியது; பொருளில் பெரிது,

சோர்வை தீர்க்கும் சீரிய அறிவு.

வாழ்க்கை வலிகளில் வழிகாட்டும்,

வழுவாமல் நடத்தும் ஒளிவிளக்கு.

இனிப்பாய் தித்தித்து நாவில் அமரும்,

இடரிலும் தைரியம் ஊட்டும் மருந்து.

அரசனுக்கும் அடியவர்க்கும் ஒரே அளவு,

அறத்திற்கான அளவுகோல்.

உடலுக்குப் பசி போல் உள்ளத்திற்கும்,

திருக்குறள் தேவை  தினசரி உணவு.




கசப்பான உண்மையையும் கனியாக்கி,

கருணையோடு சொல்லும் கலை.

காலம் மாறினாலும் கருத்து மாறாது,

காலத்தை வெல்லும் நியதி.

மனமருந்தாய் மௌனத்தில் பேசும்,

மனிதனை மனிதனாக்கும் நூல்.

ஒரு குறளில் உலகம் அடங்கும்,

அறத்தின் அகில அகராதி.

படித்தால் போதும் பாதை தெரியும்,

பின்பற்றினால் பயணம் இனிது.

நாவில் இனிப்பு, நெஞ்சில் வலிமை,

திருக்குறள் — தித்திக்கும் மருந்து.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அழகு மயில்!

news

என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

news

மதியொளி முகமோ!

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்