சென்னை: எம் பி சி பிரிவினரை பாமக கைவிட்டாலும் விசிக உறுதுணையாக இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பாஜக உடன் பாமக சேர்வது என்பது பூஜ்ஜியத்துடன் ஒன்று சேர்வது போல, பாஜக பூஜ்ஜியம், பாமக ஒன்று என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
வருகின்ற லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென சிக்னலை மாற்றி பாஜகவுடன் போய் விட்டது பாமக. பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அணியில் இணையும் ஒரு முக்கிய பெரிய கட்சியாக தற்பொழுது பாமக உருவெடுத்துள்ளது. இன்று சேலத்தில் நடக்கும் பாஜக கட்சி கூட்டத்திலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், பாஜகவில் பாமக இணைந்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், விவசாயிகள் தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜி எஸ் டி கொண்டு வந்ததால் தான் சிறு, குறு தொழிலாளர்கள் நலிவடைந்துள்ளனர். சமூகநீதி என்று வருகையில் ஒரே கோட்டில் திமுக மற்றும் அதிமுக இருக்கும்.
தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா ஏற்பு.. சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் தெலங்கானா, புதுச்சேரி ஒப்படைப்பு!
லோக்சபா தேர்தலில் மக்கள் அனைவரும் 100% ஓட்டளிக்க வேண்டும். எம் பி சி பிரிவினரை பாமக கைவிட்டாலும் விசிக உறுதுணையாக இருக்கும். மக்கள் மத்தியில் பாஜக வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. இதனை மக்கள் அனுமதிக்க கூடாது.
எம் பி சி பிரிவினரை பாமக கைவிட்டாலும் விசிக உறுதுணையாக இருக்கும். மக்கள் மத்தியில் பாஜக வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. இதனை மக்கள் அனுமதிக்க கூடாது. பாஜக உடன் பாமக சேர்வது என்பது பூஜ்ஜியத்துடன் ஒன்று சேர்வது போல, பாஜக பூஜ்ஜியம், பாமக ஒன்று என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}